பெண்களும் ஆண்களும் அதிகார ஆதிக்க அரசியலும்

மக்களையும், சமூகத்தையும் பிரிந்து எந்த ஒரு சமூக சார்ந்த அரசியல்  வேலைகளைச் செய்யதால் நாம் மக்களிடம் இருந்து அண்ணியப்பட்டு விடுவேம்;. பெண் விடுதலை என்பது சமூக சாரந்த விடுதலையாகும்.

ஆணாதிக்க ஆட்சி அதிகாரம் ஆரம்பமாகி இன்று வரை அந்த அதிகாரத்துகுள்த் தான் பெண் விடுதலையைப் பெண்ணியவாதிகள்; தேடுகின்றார்கள். இது ஜதார்த்தமாக இருப்பதால் இப் பெண் விடுதலைப் போராட்டங்கள் யாவும் தோல்விக்கு மூல காரணமாகும். தமிழ்ப் பேசும் பெண்களின் பெண்ணிய கருத்தையும் அதன் செயல்ப்பாட்டையும் மூலமாக வைத்து ஜதாத்தமான உலக பெண்களின் வாழ்வியல் நடைமுறைகளை வைத்துக் கொண்டுதான் இக் கட்டுரையை எழுதுகின்றேன். ஏறத் தாழ உலகப் பெண்ணியக்காரர்களுக்கும் இது கிட்டத் தட்டப் பொறுந்தும் என்று எண்ணுகிக்றேன்.

இன்று உலகமும், சமூகமும் மனிதனும் நாகரிக வளர்ற்சியால் 30 சத வீதமான பெண்கள் குடும்பங்கள் சமத்துவமாகவும், சமாதானமாகவும், சுதந்திரமாகவும் சமூக விதி முறைப்படியும், ஜனநாயக ரீதியாக விட்டுக் கொடுத்தும் பரஸ்பர உறவுகள் மூலம் தங்கள் குடும்ப வாழ்கையில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். அங்கு ஆண்களும் பரஸ்பர விட்டுக் கொடுப்புக்கள் உண்டு. இங்கு அமைதி, அன்பு, சமாதானம், காதல் போன்றவைகள் ஜதார்த்தமான முறையில் இடம்; பெறும். 60 தச வீதமான குடும்பங்கள் பெண்கள் தங்கள் சமூக பெறுமானத்துக்காக தங்கள் மனித இருப்பையும் கௌரவத்தையும் விட்டுக் கொடுத்து பரஸ்பர உறவுகளைப் பேணி குடும்ப வாழ்கையில் ஈடுபடுள்ளார்கள். இங்கு ஆண்கள் தங்களை மனித நேயம் உள்ளவர்கள் என்று காட்ட பரஸ்பர விட்டுக் கொடுப்புக்களை இரைய சமூகம் திணிக்கின்றது. இவர்கள்;, முற்போக்கு தன்மை கொண்டவர்களும், மார்க்சியத்தையும், சமத்துவதையும், சமாதானத்தையும் பேசும் ஜனநாயக வாதிகள் ஆகும். இங்கு அன்பு, அமைதி, சமாதானம், காதல் போன்றவை அடக்கு முறைத் தன்மை கொண்டதாக இருக்கும். இதற்கு உடல் உறவை நல்ல உதாரணமாக் கூறலாம்.

இன்று உலகத்தில் 90 சத வீதமான குடும்பங்களில் பொருளாதாரப் பிரச்சளைகள் தான் முதன்மையாக விளங்குகின்றது. சமூக முரண்பாடுகளுக்கும், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுக்கும் ஏற்ற விதத்தில்  வலைந்து கொடுத்து குடும்ப வாழ்கையைச் சிதைக்காமல் வாழ்கின்றார்கள்.

மிகிதியான 10 சத வீதமான குடும்பங்களில் பெண்களுற்கு எதிராக ஆண்களும், அதே போல் ஆண்களுற்கு எதிராக பெண்களும் செயல்படுகின்றார்கள். இது குடும்ப உறவுகளுக்கு எதிரான செயல்ப் பாடாகும்.

இந்த வக்கிரப் புத்தியின் செயல்ப்பாடுகளுக்கு உயர் சமூகமும், அதுசார்ந்த ஆண்-பெண் இருபாலாருக்கும் பங்கு உண்டு. இங்கு இருபாலானர்கள் மத்தியில் ஈகோ தான் முதன்மையான இடத்தை வாகிக்கின்றது. இதனால் இக் குடும்ப வாழ்க்கையைச் சிதைவதற்கு இதுதான் மூல காரணமாக அமைகின்றது. இதற்கு போலிக் கௌவுரமும், தகுதிக்கு அதிகமான தங்களை உயர்வாகக் கருதுவதுவும். மற்றைய உறவுகளையும், மனிதர்களை மனிதர்களாக மதிக்காது, பணத்துக்கும், பட்டப் படிப்புக்கும் முக்கியத்துவம் கொடுப்பதாலும், பெண் ஆண்களிடம் இருந்து அதிகமாக எதிர் பார்ப்புக்களை எதிர்பாப்பதாலும், ஆண் பெண்ணிடம் இருந்து அதிகாமான எதிர் பாப்புக்களை எதிர்பாப்பதாளும். குடும்பங்கள் சிதைந்து விடுகின்றது. உறவுகளை மதிக்காமல் மேலாதிக்க அதிகாரச் சிந்தனையை உள் வாங்கிய படியால்த் தான் இக் குடும்பங்கள் சிதைவுக்கு மூல காரணமாக அமைகின்றது. இப்படிப்பட்ட இவர்களில்த் தான் பெண் விடுதலை என்று கூறுபவர்கள். ஆண் ஆதிக்கத்தில் இருந்து விடுபட துடிக்கின்றார்கள். ஆண்ணிடம் இருந்து (கணவனிடம் இருந்து) விடுபட்ட பின்பும் வேறு ஒரு அண் துனையின்றி இயங்க முடியாமல் தவிக்கின்றார்கள். இதனால் இவர்கள் அரசு பணத்துக்காக (N. பு. ழு. ப் பெண் நிலை வாதிகள்) முதல் இடத்தில் உள்ளார்கள்.

முதாலாளித்துவ குடும்ப அமைப்பை உடைத்து புதிய சமத்துவமான குடும்ப அமைப்பை உருவாக்க வேண்டும் என்று மார்க்ஸ் கூறினார் இதில் உடைக்க வேண்டும் என்ற செல் தொடரை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்தி, குடும்ப அமைப்பைப்பற்றி மார்க்ஸ் கூறியதைத் தப்பாகக் மொழி பெயர்த்துவிட்டார்கள் இந் பெண் நிலைவாதிகள்.

இது போல் மார்க்சியம் லும்பன் யார் என்று கூறியதை, ஈழ விடுதலை அமைப்புக்கள் லும்பனின் குணாம்சத்தை மார்க்சியம் (லெனின் கூற்றை) கூறியவற்றை தப்பாக மொழி பெயர்த்து விட்டது போன்றது ஆகும்.

தமிழர்கள் பிள்ளைகள் வளர்ப்பு முறை. தமிழ்ப் பெண் தன் குழைந்தைக்குத் தாலாலாட்டுப் (இது ஆண் வழி சமூகத்துக்கு எதிரானது) பாடுவதை உதாரணமாகத் தருகின்ரேன். அத்தை (கணவனின் சகோதரி) அடித்தாலா அரலிப்பூம் தடியாலே, மாமன் (தாயின் சகோதரன்) அடித்தாரோ மல்லிகைப் பூச் சென்டாலே. இப்படியான வக்கிரத் தனமானப் பாடல்களைக் குழைந்தைப் பருவத்திலேயே நாம் நஞ்சு ஊட்டி விடுகின்றோம்.

இந்த 10 ச் சத வீதமான பெண்கள் தங்கள் தேவைகளை ஆண்ணிடம் இருந்தே மிக அதிகமான எதிர் பார்பாக்கின்றார்கள். பொருள்ளியல் தொடக்கம் உடல் உறவு வரை. இவை கிடைக்காமல் போகின்ற போதுதான் இக் குடும்பங்கள் சிதைவுடைகின்றன. இதில் ஒரு சத வீதமான சம்பவங்கள் விதி விளக்காகும்.

இன்றைய உலகச் சூழலில் 100 சதவிதமம் பெண்கள் அடிமைகள் தான். இவ் அடக்கு முறைகள் பல உருவங்களில் தோன்றது என்பதை நாம் மறுதலிக்க வில்லை. பெண்கள் ஆண்னை விட்டுப்; பிரிந்து போவது அவர்களுடைய ஜனநாயக மனித சுதந்திரமபன உரிமை ஆகும். அதற்கு பெண் விடுதலை என்று பெயர் சூட்டுவது அபத்தமாகும். மீண்டும் அந்தப் பெண் ஒரு ஆண் உதவியை நாடுவதை இன்றைய சமூகச் சூழலில் நாம் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. இதை ஜனநாயக உரிமை என்று கூறுவது அபத்தமாகும். (மனிதர்கள் தங்கள் மனதுக்குள் உருவாகும் முரண்பாடுகளை, பிரச்சனைகளை பகிர்ந்து கொள்வதற்கு நட்பு உறவு அவசியமாகின்றது. இதற்கு ஒரு ஆண் பெண் உறவு முக்கியமானதாகும் என்பதை உளவியல் விஞ்ஞானம் நிரூபித்துள்ளது.)

இப்படியான பெண் விடுதலை, போராட்டங்கள், விடுதலை என்ற சொல்லாடல்களையும் அதன் ஜதார்த்தையும் சமூகத்தையும் கொச்சைப் படுத்துவது போன்று இருக்கின்றது. இன்று வரை ஆளும் அதிகார வர்க்கம் (ஆணாதிக்க அரசியல் வாதிகள்) தான் இச் செல்லாடல்களையும், அதன் செயலப்பாடுகளையும் கொச்சைப்படுத்தினார்கள். இதை அடிப்படையாக வைத்துப் பல பெண் விடுதலைப் போராட்டங்கள உருவாகியது.

இன்றைய சமூகச் சூழலில் நடைமுறைகளையும், அதன் செயல்ப் பாடுகளையும், இம் சமூக மக்கள் பாவிக்கும் சொல் பதங்களையும் வைத்துத் தான் இக் கட்டுரையை எழுதியுள்ளேன். உலகத்தில் உருவான மொழிகள் யாவும் (ஓசை) மேலாதிக்கம் கொண்ட ஆணாதிக்க வாதிகள் தங்களுடைய சொத்து உரிமையாக்கிக் கொண்டார்கள்

1.மறுமணம் என்பது ஒரு பெண் இரண்டாவது முறை ஒருவரைத் திருமணம் செய்து கொள்வது. இது சமூகத்தில் இடம் பெறும் ஜதாத்தமான செயல் ஆகும். இது பிழையான விடையமும் அல்ல. ஒரு ஆண் பெண் உறவிலும் நம்பிக்கைகளிலும் பரஸ்பரம்த்திலும் தங்கியுள்ள விடையமாகும்.

2. ஆண் சிந்தனையின் செயல்ப்பட்டில் இருந்து கொண்டு பெண் விடுதலையைக் கதைப்பது ஆண் சாரர்ந்த பெண் நிலைவாதி என்று குறிப்பிடப்படுகினN;றன். பெண்ணியத்தைப் பேசிக் கொண்டு ஆணாதிக்கச் செயல்ப் பாடுகளுடன் இணைந்து செயல்ப் படுவதைத் தான் ஆண் சார்ந்த பெண்ணிலை வாதியாகும். உதாரணம் இந்த ஆணாதிக்க அரசியலுக்குள் பெண் விடுதலையைத் தேடும் பெண்களை குறிப்பிடுகின்றோன்.

3. தோல்வி என்பது முடிவான முடிவு அல்ல. தோல்வியில் இருந்து தான் புதிய தொடக்கம் உருவாகும்

4. பெண்- ஆண் உடல் உறவு குடும்ப வாழ்கைக்குத் தேவையான ஒன்றே ஒழிய அது மிக முக்கியா ஒரு காரணீ அல்ல. இதை பெண்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இருந்தாலும் விட்டுக் கொடுப்பு, பரஸ்பர உறவுகளுற்கு முக்கியத்தவம் கொடுக்கபட வேண்டும்.

5. இந்த அதிகார ஆணாதிக்க வர்க்கம் தங்களை பாதுகாக்கச் சமூகத்துக்கும் (அரசியல் ரீதியாகவும்) மக்களுக்கும் (பெண்-ஆண்) ஜனநாயக முறையில் சில சலுகைகளை வழங்கி தங்களை ஜனநாயக வாதிகளாக காட்டுகின்றார்கள். இவைகளைப் பயன் படித்தி பெண்கள் தங்கள் (பெண்) விடுதலைப் போராட்டத்தை முன் எடுக்கலாம். உயர் பதவிகள் மூலமும், வாக்குரிமைகளைப் பயன் படித்தி பெண்கள் தங்கள் அடிமைத்தனத்தை அம்பலப்படுத்த முடியும். (ருசியாவில் ஏர்ப்பட்ட லெலின் தொழிற் சங்க நடவடிக்கைகள் மூலமும் பாராளுமன்றத்தின் மூலமும் சார் மன்னனின் சகல அடக்கு முறைகளையும் அம்பலப்படித்தியது போல். இதனால் சமூகப் புரட்சியை நடத்தி வெற்றி பெற முடிந்தது.

இது போன்று தான் பெண்கள் தங்கள் போராட்டத்தை நடத்த வேண்டும். இத வெற்றி சமூகம் சார்ந்த அரசியல் தன்மைகளைக் கொண்டு இருக்க வேண்டும். இதன் மூலமாகத் தான் பல (இனம்-சாதியம், பிரதேசம், தேசம்;) பெண்களை விடுதலைப் போராட்டங்களை ஐக்கியப்படுத்த முடியும். இதன மூலம் பெண்களின் மத்தியில் (பெண்ணுக்கு பெண் எதிரான கருத்தியலை கொண்ட) உருவான முரண்பாடுகளையும், ஐயப்பாடுகளையும் நிக்க முடியும்

(சுதந்திரத்துக்கு முன் இலங்கையில் தொழிற் சங்கங்கள் மூலம் தொழிலார்களை ஐக்கிப் படித்தியது போல். சுதந்திரத்துற்கு பின் வர்க்க உணர்வுகள் இல்லாத தலைமைகளால் இவ் ஐக்கியம் சீர் குழைந்தது.) பெண் விடுதலைக்குத் தலைமை தாங்குபவர்கள் இவைகளை அறிந்து இருக்க வேண்டும். பிற்காலத்தில் மார்க்சியத் தொழிற் சங்களின் தலைமைகள் விட்ட பிழை தான் அவ் ஐக்கியத்தை முழுமையாகச் சீர் குழைவதற்கு முக்கிய காரணமாக விளங்கியது. இவைகளை ஒரு அனுவபப் பாடமாக எடுத்துக் கொண்டு பெண் விடுதலைப் போராட்டத்தை நடத்த வேண்டும்.

5. இன்றைய மனித நாகரிகமும், தத்துவாகள், சிந்தனைகள் வளர்ச்சி உற்ற நிலையில் பேசிப் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ளாம் என்ற் நிலைமை இன்றைய உலகத்தில் உருவாகியுள்ளது.

(இன்று பல குடும்பங்கள் தங்கள் முரண்பாடுகளைப் விட்டுக் கொடுத்துப் பேசித் தீத்துக் கொள்ளும் விதம் போன்றுது)

தத்துவங்களை, கொள்கைகளை விட ஜதார்த்தமான வாழ்வியல் நடை முறைகளை கவனத்தில் எடுத்து இதற்காக அத் தத்துவங்களையும், கொள்கைகளையும் மாற்றி அமைக்க வேண்டும். அன்பு, அமைதி சமாதானம், சமத்துவம்;, ஜனநாயகம், பன்முகத்தன்மை, மனிதம் போன்ற நல்ல குணாம்சங்களை உள் வாங்கிய கொள்கையாகவோ தத்துவங்களாகவோ மாற்றி விடுதலைப் போராட்டங்களை முன் எடுக்க வேண்டும்.

இதற்கு புரட்சி நடைபெற்ற நாடுகளில் மார்க்சியத் தத்துவத்தை (வழி முறைகளை) மற்றி புரட்சியை வெற்றியடைய வைத்தார்கள் என்ற உண்மையை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

ஒருவர் இயங்கியல் வரலாற்றுடன் ஒடினால் அவர் வரலாற்று நாயகன் ஆவன். இதற்கு உதாரணம லெனின், மாஓ போன்றவர்கள்.

சமூக வரலாற்றுக்கு எதிராகவும் முரணாகவும் ஒடியவர்கள் பயங்கரவாததிகளாகும்.

இதற்கு உதாரணம் ஹிட்லர், முசெலினி போன்றவர்கள்.

ருசிய மக்கள் கூறியவை:-

ருசியாவின் விடுதயை பெற்றுக் கொடுப்பதற்காக உங்கள் நாட்டில் மார்க்சிம் சார்ந்த பல விடுதலை அமைக்கள் இருந்த போதிலும் ஏன் எப்படி லெனின் தலைமையை உள்ள அந்த விடுதலை அமைப்பை ஏற்றுச் செயல்ப்பட்டீர்கள்? என்ற கோள்விக்கு அவ் ருசிய மக்கள் கூறிய பதில் இவ் அமைப்பில் உள்ள தலைவர்களும், போராளிகளின் நடவடிக்கைகளும் செயல்ப்பாடுகளும் தான் அவ் அமைப்புடன் எங்களை இணைய வைத்தது.

பொருளீயல் சமத்துவம் ஏற்ப்பட்டு 50 வருடத்துக்குப் பின் ருசியாவில்

புரச்சிக்கு எதிரான கலவரத்தில் ஒரு புரட்சியை வெற்றி அடையச் செய்த ஒரு தலைவனின் சிலையை அம் மக்கள் உடைக்கும் போது எழுந்த கேள்விக்கு அம் மக்கள் கூறிய பதில் அன்று ஒரு சார் மன்னனுக்கு எதிராக போராடினேம் இன்று பல சார் மன்னர்களுக்கு எதிராகப் போராட வேண்டியுள்ளது என்று பதில் கிடைத்தது.

ருசியாவில் பொருளீயல் அடக்கு முறையைத் தவிர்ந்த மற்றைய சமூக அடக்கு முறைகள் விடுதலை அடையவில்லை என்பதை இந் நிகழ்வு எமக்கு எடுத்துக் காட்டுகின்றது. சமூகத்தில் உள்ள சகல அடக்கு முறைகளும் (பெண் அடக்கு முறை உள்ப்பட) ஒரே நேரத்தில் விடுதலை பெற்றால்த் தான் அந்த நாடு சமூக அரசியல் விடுதலை அடைந்த நாடாக அமையும்.

சமத்துவம், சமாதானம், ஜனநாயகம், பன்முகத் தன்மை, மனிதத்தை புரிந்து கொள்ளும் உணர்வுகள் மூலம் மனித மதிப்புப் போன்ற சகல அம்சங்களும் சிறந்த முறையில் இயங்கும்

2. இலங்கையில் தமிழ்-சிங்கள மேலாதிக்க இனவாதிகள் எல்லைப் புறங்களில் உருவாக்கும் இனக் கலவரங்கள் தான் ஒரு இனத்தின் மீது இனக் குரொதமாக வளர்க்கப்படுவதை அவதானித்தால் அதிகார ஆதிக்கச் சக்திகளின் சிந்தனைகளையும் குணாம்சங்களையும் நாம் விளங்கிக் கொள்ள முடியும்.

இவ் இரு உதாரணங்களை உங்கள் சிந்தனையில் வைத்துக் கொண்டு இக் கட்டுரையை வாசியுங்கள்.

பெண்கள் ஏன் நேரடியாக இந்த அரசியல் பிரவேசம் செய்ய கூடாதுதா?  என்ற கேள்விக்கு பதில் எழுதப்பட்டதே ஒழிய ஜதாத்தமான பெண்; விடுதலை சம்பந்தமாக எழுதவில்லை. ஏன் எனில். இன்றைய அரசியல் என்பது ஆளும் அதிகார மேலாதிக்கம் ஆண் வர்க்கத்திடம் அதிகரங்களைக் குவிக்கும் இடம் ஆகும். ஆண் ஆதிக்கம் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் இந்த நிமிடம் வரை உலகத்தில் உருவான அரசியல் எல்லாம் இந்தத் தன்மையையே கொண்டு இருந்தது. இங்கு அடிமட்டத்தில் உள்ள மக்கள் (ஆண்களும்- பெண்களும். பெண் கூடுதலாக அடக்கப்பட்டார்கள்) அடக்கி அடிமையாக ஆளப்பட்டார்கள். இவைகள் புரட்சி நடந்த நாடுகளிலும் இடம் பெற்றது.

விடுதலை என்பது ஒரு மாற்றத்தை (வளர்ச்சியை) ஏர்ப்படுத்துவது. அன்றில் இருந்து இந்த நிமிடம் வரை உலகத்தில் உருவான பெண் விடுதலைகள் அனைத்தும் இந் ஆளும் ஆணாதிக்க அதிகாரத்தை மையப்படித்தித்தான் உருவாக்கப் பட்டது. கற்பனையில் எழுதப்பட்ட மத கதைகள் கூட இந் தன்மையைக் கொண்டுதான் உருவாக்கப்பட்டது. மதத்தையும் மக்களையும் பிரிக்க முடியாது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு சிலர் கடவுளும், மதமும் இல்லை என்று கூறி செயல்ப்படலாம். முழு மக்களும் சமூகங்களும் அப்படியாகக கருத முடியாது. கடவுளின் பெயராலும் எஜமான்களின் பெயராலும் ஆண் அதிகாரச் சிந்தனைகள் உருவாகியது.

ஒரு மனிதன் தன் சகல இருப்புக்களையும் இழந்த பின் அவன் பல்லம் பாடும் போது அவனின்;; புகல் இடம் (கடவுள்) கோயில் தான். இதை மனித வாழ்வியல் ஜதார்த்தத்தைப் பார்த்தால் உண்மை நிலை புரியும்.

மக்களுக்கு எதுகும் தெரியாது, புரியாது என்று கருதுவது, எண்ணுவது இவைகள் மேலாதிக்க ஆண் அதிகாரச் சிந்தனைகள் ஆகும்.

அடிமட்ட சாதாரண மக்களின் வாழ்வியலில் இருந்தும், அவர்களின் சமூகச் சூழலில் இருந்தும் விடுதலையை கணிக்க வேண்டும். இது பெண்கள் விடுதலைக்கும் பெருத்தமாகும். பெண் விடுதலை என்று கூறிக் கொண்டு மேலாதிக்க ஆண் அதிகார அரசியலைப் பற்றி கதைத்தால் ஜதார்த்தமான விடுதலையைப் பற்றி கதைக்கும் பொழுது பல குழப்பாமான சூழ் நிலைதான் எம் மத்தியில் உருவாகும். (இன்று ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏர்ப்பட நிலை போல்) இன்றைய அரசியல் ஆண்களின் ஆதிக்கத்தால் பலம் வாய்ததாக இருக்கின்றது. இவர்களில் பலர் (புத்திஜீவிகள்) விடுதலை என்ற பெயரில் பல போராட்டங்களை உருவாக்கிகின்றார்கள். அதில் ஒன்று தான் இன்று வரை உருவான பெண் விடுதலைப் போராட்ங்கள் ஆகும். மொழி, இன, சாதியம் போன்ற பல போராட்டங்கள் விடுதலை என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டுத் தோல்வியில் முடிந்து விட்டது. இவை அடிமட்ட மக்கள் மத்தியில் சமூக அரசியல் விழிப்புணர்ச்சியை உருவாக்க எர்ப்படுத்தப்பட்ட போராட்டங்கள் ஆகும். இப் போராட்டங்கள் தோல்வியில் முடிந்தபடியால் அவ் அவ் முரண்பாடுகளுடன் ஐக்கியமாகிக் கொண்டார்கள்.

உதாரணமாக:- சாதி ரீதியானப் போராட்டம் அம் மக்களை மதத்துடன் ஐக்கியப்படித்தியது. தொழிற் சங்கப் போராட்டங்கள் தொழிலாளர்களை முதலாளித்துவத்துடன் ஐக்கியப்படித்தியது.

இதனால் எமது மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்ட புரையோடிய முரண்பாடுகளை தீர்ப்பதற்குப் பதிலாக, மொழி, இனம், நாடு (தோசியம்) போன்ற விடுதலை கிடைத்தப் பின் சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் சாக்கடை முரண்பாடுகளை தீர்த்து வைக்கலாம் என்று இந்த ஆளும் ஆண் அதிகாரவர்க்கம் கூறுவதை இன்று நீங்கள் அவதானிக்க முடிகின்றது.

இந்த அடிப்படை அரசியலில் இருந்து செயல்ப்படும் ஆண் ஆதிக்க அதிகார வர்ககம் தலைமை தாங்கும் போராட்டங்களில் அதிகமான பெண்கள் பங்கு பற்றுகின்றார்கள். இன்று உலத்தில் இடம் பெற்ற போராட்டங்களை உன்னிப்பாக அவதானித்தால் ஜதார்த்த நிலை புரியும். (இன்று N. பு. ழு. க் காரர்களும் பெரிதாக பெண் விடுதலையைப் பற்றிப் பேசுகின்றார்கள்)

உலகத்திலேயே பெண்கள் தங்கள் விடுதலைப் போராட்டங்களை ஆண்களின் உதவியுடன் (மறைமுகமாக) தான்; தொடங்கினார்கள். ஆண் ஆதிக்கத்திற்கு எதிராக ஒரு சமத்துவமான ஜனநாயகத்தையும் மனித சமத்துவத்தையும் பிரதிபலிக்கக் கூடிய போராட்டங்களாக அவை அமையவில்லை. இருந்தாலும் ஆண் ஆதிக்கத்தைப் போன்ற நிலைப்பாட்டைத் தான் பெண்கள் தங்கள் விடுதலை என்ற பெயரில் பெண் ஆதிக்கத்தை (ஆண் அதிகார ஆதிக்கத்துக்குச் சாமானமாக) நிலை நிறுத்துவதுத்துக்கான போராட்டமாக உருவாக்கப்பட்டது

இம் முன்னணிப் பெண்களின் குடும்ப உறவில் உள்ள சில ஆண்களின் மீது இருந்த வெறுப்பால்த் தான் இப் போராட்டங்கள் உருவாகியது. மானிட வர்க்கம் கூடாது என்று கருதிய சில பழக்க வளங்கங்களை ஆண்கள் பயன்படுத்துவதால் அவைகளை பெண்கள் பயன்படுத்துவதன் மூலம் சமத்துவம் பிறந்து விடும் என்ற கருத்தில் உருவாக்கப்பட்டப் போராட்டங்களாகும். இதனால் குடும்ப உறவு சிதைகின்றது. நாகரீகம் அடைந்த நாடுகளில் (ஜனநாயகம் மலிந்து இயங்குகின்றது) உயர் பதவிகள் வகிக்கும் பெண்கள் கூட கொடுமையில் இருந்து தங்களை விடுவிக்க

முடியாத நிலையில் 60 வருடங்களுக்கு முன்னர் இப் போராட்டங்கள் யாவும்

மேல் மட்ட மேலாதிக்க அதிகாரம் கொண்ட பெண்களால் பெண் விடுதலைப் போராட்டங்கள் உருவாக்கப்பட்டது. அறிவுஜீவிகள் என்று கருதப்பட்ட ஆணுடைய சிந்தனை வடிவத்தில்த் தான் இப் போராட்டங்கள் வழி நடத்தப்பட்டது. இவர்களுக்கு ஆண் ஆதிக்கத்தால் ஏர்ப்பட்ட வடுக்கள் தான் குடும்ப உறவை சிதைக்க வைத்தது. இதனால் தங்கள் சிந்தனைகளை நேரடியாக வெளிப்படுத்த முடியாததால்த் தான் சில அறிவுஜீகளின் (ஆண்கள்) உதவியை நாட வேண்டிவந்தது. அறிவுஜீவிகளின் மத்தியில் அவர்களுக்கு அறியாமலே புதைந்து கிடந்த அந்த ஆண் ஆதிக்கச் சிந்தனையின் வெளிப்பாடுதான் இப் பெண விடுதலைப் போராட்டங்கள் பிழையான பாதைக்குக் கொண்டு சென்றது. புதுமையை உருவாக்குவதாக கதை அளக்கும் பெண் விடுதலையைக் கதைக்கும் பல கலை இலக்கய (கவியர்கள்) வாதிகள் பெண்களை செத்துவடைமையாக்கி விட்டார்கள்.

உதாரணமாக யாழ்ப்பாணத்தில் உருவான பூரணி எனற பெண் விடுதலை அமைப்பின் முனனணி பாத்திரம் வகித்த பெண்கள் பயங்கரவாதத்தை ஆதரித்த படியால் அவ் அமைப்பு அழிந்ததுவும் அல்லாமல் அவர்களையும் அழித்தது. பின் கிழக்கில் இவ் அமைப்பு சூரியா பெண் விடுதலை அமைப்பாக இயங்கியது. அது கூட இந்த ஆணாதிக்க பயக்கரவாதிகளுக்கு முன்னால் இயங்க முடியாமல் போய் விட்டது.

குடும்பம் என்பது ஜனநாயகத்தையும் மனிதத்தையும் மதிக்கின்ற நட்பு ரீதியான உறவுகளும், பன்முகத் தன்மை கொண்டதாக அமைப்பாக அமைய வேண்டும். குடும்பங்களுடன் வாழும் பெண்கள் பல கற்பனாவாதக் கனவுகளுடன் வாழ்கின்றார்கள். இக் கனவுகள் நிறைவு பெறாவிட்டால் (கணவன் என்ற ஆணிடம் இருந்து). குடும்பங்கள் சிதைந்து விடுகின்றது. இதனால் பெண் விடுதலை என்ற பெயரில் ஆண்களுக்கு எதிராக பொய்யான புரளிகளை கிளப்பி விடுவார்கள். இதற்குப் பதிலாக ஆண்களும் பெண்கள் மீது பழிகளைப் போட்டு அனாகரிகமாகவும், தரக் குறைவாகவும் பேசுகின்றார்கள். உடல் உறவு வாழ்க்கை அல்ல. ஆனால் அது வாழ்க்கைக்கு முக்கிய ஒரு காரணியும் இல்லை. உடல் உறவு முழுப் பெண்களுக்கு தேவை இல்லை என்று பெண்ணிலை வாதிகள் கருதுவார்களானால் மனித உயிர் இனங்களை உருவாக்காமல் மனித இனத்தை அழிக்கப் போகிறார்கள் என்று அர்த்தம் உருவாகும். விடுதலை என்பது மக்களிடையே (பெண் உள்ப்பட) சமூகங்கக்கிடையோ மாற்றங்களையும், வளர்ச்சியையும் உருவாக்குவது. அழிப்பது அல்ல. மார்க்ஸ் இந்த முதலாளித்துவ குடும்ப கட்டுமானங்களை உடைத்து புதிய குடும்ப அமைப்பை உருவாக்கச் சொன்னாரே ஒழிய, குடும்பங்களைச் சிதைக்கச் சொல்லவில்லை.

உடல் உறவு பெண்களை அடிமைப்படுத்துகின்றது என்பதை பெண்கள் புரிந்து கொண்டால் குடும்பத்தில் பிரச்சனைகள் தவிர்கக முடியும். உடல உறவு நற்பு ரீதியானது. இதை முதலில் பெண்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் தான் பெண்கள் குடும்பத்திற்குள்ளேயே உள்ள ஆண் ஆதிக்கத்துக்கு எதிராக போராட்டங்கள் ஆரபிக்க முடியும். இவை சமூகத்துடன் விரிவடையும். இதன் ஊடாகத்தான் பெண்கள் சுதந்திரமாக சமூக அரசிலுக்குள் நுழைய முடியும். இவ் அரசியல் யாரையும் கட்டுப்படுத்தாது. அடிமையாக்காது. (இன்றைய நாகரிக வளர்ற்சியில் உடல் உறவுக்கு பல சேர்கையான வழி முறைகள் உண்டு. இது எந்த

ஆண்களையும், குடும்பங்களையும் பாதிக்காது. இதை பெண்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்)

மதங்களும் – பெண்களும்.

உலகத்தில் உள்ள சகல மதங்களும் பெண்களை அடிமையாக்கி அரசின் மூலம் இரண்டாந் தரப் பிரசையாக்கி விட்டார்கள். இவை அரசு அதிகாரம் மூலம் தான் நடைமுறைப் படுத்தப்பட்டது. சகல மதங்களும் அரசு அதிகாரத்தின் பின் புலனாகவே இயங்கியது. இதனால்த் தான் ஒருத்திக்கு ஒருவன் (சொத்துடமைக்கு) ஒருவனுக்கு பல பெண்கள் என்று (அந்தப் புரங்கள்) கூற்று உருவாகியது. இந்து மதம் ஆதிக்கத்துக்கு வந்த பின் தான் இவைகள் உருவாகியது. பெண்ணின் ஆளுமைக் காலத்திலும், சைவ சமய விழாக்களில் (இந்திரன் சந்திரன் இயற்கை விழாக்களில்) பெண்-ஆண் (குடும்பமும்) சமத்துவமான சமாதான முறையில் விழாக்கள் இடம் பெற்றது.

கிரிஸ்தவ மதம் ஆணின் விலா எலும்பில் இருந்து உருவானவள் பெண் என்றும், பெண் ஆசைப் படுபவள் என்றும் (ஆதாம் ஏவாள் கதை மூலம்) பெண்களை அடிமையாக்கினார்கள். அதோ குட்டையில் உருவான இஸ்லாம்

மதமும், அதுபோல் மற்றைய மதங்களும் பெண்களைக் கொடுமையான முறையில் அடிமையாக்கினார்கள். கிரிஸ்தவ மதத்துக்கும் இந்து மதத்துக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. சைவ சமயம் தனித்துவமான சமயமாகும். இராமாயணப் போரின் முடிவில் சைவம் அழிக்கப்பட்டு இந்து மதம் ஆதிக்கத்துக்கு வருகின்றது. வட இந்தியாவில் இருந்து உருவாகி தெற்கை நேக்கிப் பரவியது. (ஜேர்மனிக்கும் பரவியது) இது தான் ஆரியர் கலாச்சாரமாகும். சைவ சமயத்தின் கதைகளை இந்து மதக் கதையாக மாற்றி விட்டார்கள். இரு மதத்தின் கடவுகளையும் குடும்ப உறவுகளாக்கி விட்டார்கள். நாமமும், பட்டையும் ஒன்றாகியது.

உதாரணங்கள்:-

1. சிவபெருமான் தன் உடலில் இடது பக்கமாகத்தான் பார்வதிக்கு அடைக்கலம் கொடுத்து ஆண்- பெண் சமத்துவத்தைப் போதிக்கின்றது. அது கூட ஆண் சார்ந்த சமத்துவம் ஆகும்.

ஜதார்த்தமாக பார்த்தால் பார்வதியின் உடலில்த் தான் சிவபெருமானுக்கு அடைக்கலம் கொடுத்து இருந்தல் வேண்டும். அப்போது தான் சமத்துவத்தின் ஜதார்த்தைக் காட்டும்.

பெண் தனித்துவமானவள் என்று கருதி பெண் கடவுள்களை சைவ சமயம் உருவாக்கியது. (ஆண் கடவுள் இன்றி) ஆனால் இந்து மதம் இக் கடவுள்களுக்கு ஆண் கடவுள்களை இணைத்து விட்டார்கள்.

உதாரணமாக சிவபெருமானுக்கு- பார்வதி என்றும், சரஸ்வதிக்கு- பிரம்மா என்றும். கணவன் மனைவியாக போன்று குடும்ப உறவுக் கதைகளை உருவாக்கி விட்டார்கள்.

மானிடனைப் படைப்பவன் பிரம்மா, அறிவை (மூளையை) வைப்பவள் சரஸ்வதி இதற்கு ஒரு கதை மூலம் விளக்குகின்றேன். மானிடனைப் படைக்கும் போது உணர்சி வசப்பட்டு பிரம்மா சரஸ்வதியை அழைப்பார். அப் போது சரஸ்வதி படைக்கப்பட்ட மானிடனுக்கு மூளை (அறிவு) வைத்துக் கொண்டு இருப்பாள். கணவன் கூப்பிடுவதால் மூளை வைக்கும் வேலையை நிறுத்தி வைத்துவிட்டு பிரம்மாவிடம் செல்வாள். பின்னர் சரஸ்வதிக்கு ஏர்ப்பட்ட இன்ப அதிச்சியுடன் மூளைவைக்க சரஸ்வதி வரும் அபொழுது முன்னர் மூளை வைக்கப்ட்ட மானிடனுக்கு மூளை வைக்க

வில்லை என்று கருதி அம் மானிடனுக்கு இன்னும் ஒரு மூளையை வைத்து விடுவாள். (அவர்கள் தான் அறிவுஜீவிகள்) மூளை வைக்காமல் விடப்பட்ட மானிடனுக்கு மூளை வைத்ததாகக் கருதி  மூளை வைக்காமலே விட்டு விடுவாள் சரஸ்வதி. (அதுதான ஏழை மக்களாகி நாமும் பெண்களும்) இது ஒரு ஜோக்காகக் கூறப்படும் கதை  இக் கதையை சரியாக ஆய்வு செய் தால் பல உண்மைகள் புரியும். இரு மூளையுள்ளவன் அதிகார வர்க்கம், ஒரு மூளை உள்ளவன் அதிகாரத்துக்கு உதவியாக இருப்பவன். மூளை வைக்கப்படாதவன் பாட்டாளி வார்க்கமும், பெண்களும் ஆகும்.

இந்து மதம் மக்களை வருனங்களாகப் பிரித்து மானிடன் மத்தியில் ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கி பெண்கள் உள்ப்பட உழைக்கும் மக்களை அடிமையாக்கினார்கள். இதற்கு ஆறுமுக நாவலரின் இந்து மதப் போதனைகள் நல்ல உதாரணமாகும். யாழ் உயர் மேட்டுக் குடியினரால் உருவாக்கப்பட் பரைம்பரைத் தேச வளமைச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்று அன்று பிரித்தானியர்களுக்கு அழுத்தம் கொடுத்து சட்டமாகியவர் இந்த ஆறுமுகநாவலர்.

(ஒளவையார் என்ற பெண்ணைக் கொண்டே பெண்களை இழிவுபடுத்தும் விதத்தில் ஆத்தி சூடியை உருவாக்கினார்கள். இதன் வளர்ச்சிப் போக்கு இன்று பெண்களை பெண்கள் மூலமாக அடிமையாக்குகினார்கள் (இந்த ஆணாதிக்கம் கொண்ட மேலாதிக்க வாதிகள்.)

முருகனின் திருமணங்கள் (தெயவானையை -ஆஸ்திக்கும், வள்ளியை ஆசைக்காக நடத்தப்பட்ட திருமணங்கள்.

கிருஸ்ண ஜெயந்திக் கதை பெண்களை பொதுச் செத்தாக்கியது.

இதை இன்றைய ஆணாதிக்க இலக்கியவாதிகள் நடைமுறைப் படுத்துகின்றார்கள். இதற்கு ஆண் சார்ந்த பெண்ணிலை வாதிகளின் ஆதரவும் உண்டு.

கண்ணகியும், நளாயினியும் (புராணக் கதைகள்) தான் பெண்களின் முதல் எதிரியாகும்

இந்து மத வாதிகள் கடவுள்களுக்கும், பூமிக்கும், நதிகளுக்கும் பெண்ணின் பெயர் சூட்டி பெண்களை புணிதம் என்ற பெயரில் அடிமையாக்கினார்கள்.

மதத்தின் வைத்து இக் கதைகளை உங்களுக்கு கூறுகின்றேன்.

அணில், புனில் என்ற இரு உயிர் இனத்தைப் பற்றிய கதை.  முதல் கடவுளான சிவபெருமான் தீர்த்தக் கிணறு ஒன்று வெட்டும் படி புனிலுக்கும், அணிலுக்கும் கட்டளையிட்டாரம். புனில் தன் சொண்டுகளால் ஒரு கிணற்றை வெட்டியது, அணில் இக் கிணற்றுச் சேற்றில் புரண்டு ஏழந்து தானும் கிணறு வெட்டிவிட்டதாகக் கூறியது. இருவரும் சிவபெருமான் முன் நின்று தாங்கள் கிணறு வெட்டியதாகக் கூறினார்கள். இவ் இருவரையும் பார்த்த சிவபெருமான் பொய் கூறிய அணிலை உண்மை கூறியதாகக் கருதி (செற்றுடன் நின்றபடியால்) அணிலை முக்தி அடையவதற்கு அதன் முதுகில் மூன்று குறியை வைத்து மோச்சத்துக்கு அனுப்பினாரம். உண்மை கூறிய புனிலை பொய் கூறியதாகக் கருதி சொம்பேரியாக வாழ்ந்து நரகத்துக்குப் போவாய் என்று சிவபெருமான் கூறினாரம்.

1. இக் கதையின் பிரகாரம் சந்தர்ப்பம் சாட்சிகள் தான் ஒரு ஜீவராசியை குற்றவாளியாக நிரூபிக்கும். இது முதலாளித்துவச் சட்ட ஜனநாயகத்திலும் உண்டு

ஒரு பெண் குடும்பத்தில் சகல வேலைகளையும் (ஒரு நாளைக்கு பெண் 18 மணித்தியாலம் வேலை செய்பவள்) செய்து வீட்டில் சிறந்த நிர்வாகியாவும் விளங்குவாள், சமூகம் அப் பெருமையை குடும்பத் தலைவனுக்குச் (ஆண்ணுக்கு) சென்று அடைய வைக்கின்றது.

இக் கதை வர்க்க ரீதியாகப் பார்க்கும் போது ஆண் ஆதிக்க சமூகத்துக்கு (முதலாளித்துவ சமூகத்துக்கு) சாதகமாகவும், பெண்களுக்கு பாதகமாகவும் (பெண் புத்தி பின் புத்தி) அமைகின்றது.

இக் கதையை சமூக நிலவரங்களுடன் ஆராய்ந்தால் பல விடையங்களைப் நீங்கள் (பெண்கள்) அறியக் கூடியதாக இருக்கும்.

புத்த குருமார்கள் ஒரு ஆற்றைக் கடக்கும் போது ஒரு பெண் ஆற்று நீரில் அடிபட்டுப் போவதை  அவதானித்த குருமார்களில் ஒரு குருவானவரைத் தவிர மற்றைய குருமார்கள் பெண்னைத் தோட்டுத் தூக்குவது பாவம் என்று கூறி அப் பெண்னை காப்பாற்ற முன் வரவில்லை. அத்த தலைமைக் குரு அப் பெண்னை காப்பாற்றி (தூக்கி) அக் கரையில் வீட்டுவிட்டு தங்கள் பயணத்தை மேற் கொண்டார்கள். தோட்டுத் தூக்கியதை பிழை பாவம் என்று கதைத்துக் கொண்டு வந்தார்களாம் மற்றக் குருமார்கள். அதற்கு அந்க் குரு கூறினாரம் நான் அப்பவே அந்தப் பெண்ணை இறக்கி வைத்து விட்டு விட்டேன் ஆனால் நீங்கள் இன்னும் அந்தப் பெண்ணை சுமந்து (மனதில்) கொண்டு வருகின்றீர்கள் என்று கூறினாறாம். தப்பாகக் கதைத்த குருமார்கள்

இன்னும் பழைய பண்பாடு கலாச்சாரத்தில் இருந்து (எல்லாவற்றையும் துறந்த குருவாக வந்த பின்பும்) அவர்கள் மாறவில்லை என்பதை (புத்த மதம்) உணர்த்தியது.  மனித குணாம்சத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது. ஒரு ஜீவராசி பல காலம் ஒரு பழக்க வழக்கத்தில் ஊறிப் போன இவர்கள் எவ்வளவு தூரம்  மாற்றுத் தத்துவங்களைப் பேசினாலும சரி;, ஜனநாயக வாதியாக இருந்தாலும் சரி, துரவியாக வாழ்ந்தாலும் சரி ஒரு சந்தப்பத்தில் அந்தப் பழைய மனித குணாம்சம் வெளிப்படும் என்று இக் கதை எமக்கு உணர்த்துகின்றது. இந்தக் குணம் எல்லா மனித ஜீவராசிகளிடமும் உண்டு. பெண் தன் விடுதலையை அடைவதற்கு அறிவு ரீதியாக தன்னை மாற்றிக் கொண்டு (சகலதையும் திறந்த மனப் பக்குவத்துடன்) சகல முரண்பாடுகளையும் தீர்ப்பதற்;கான தேடல்களை மேற் கொள்ள வேண்டும்.

புரட்சி நாடுகளில் பொருளாதாரத்தில் பெண்கள் தன்நிறைவு அடைந்தார்களே ஒழிய, பெண்கள் விடுதலை அடையவில்லை. அதனால் மார்க்சியம் தோல்வி அடைந்து விட்டது என்ற அர்த்தம் இல்லை.

சகல மதங்களும் பெண்ணை அடிமையாக்கியுள்ளது. மதங்களில் உருவாக்கப்பட்ட கலை கலாச்சாரப் பண்பாடுகள் யாவையும் பல கலாமாக மக்கள் மத்தியில் ஊறிப்போய்விட்டது. இதற்கு ஆதிக்க மேல்மட்ட மக்கள் இவைகளை ஜதார்த்தமானது என்று தொடாச்சியான பொயப் பிரச்சாரத்தால் மக்களை அதற்குள் மூழ்கிவிட்டார்கள். இதில் இருந்து விடுபட வேண்டுமாயின் அடிமட்டத்தில்  உள்ள (மூளை இல்லாத) புத்திஜீவிப் பெண்கள் தங்கள் அடக்கு முறைகளை ஆராய்ந்து ஜதார்த்தமான தேடுதல் மூலம் உண்மைகளை அறிய வேண்டும். இவைகளுற்கு ஆணாதிக்கவாதிகள் குறுக்கே நிற்பார்கள், இவைகளை உடைத்து எறிந்து சரியான இலக்கை அடைய வேண்டும்.

இதனுடைய வளர்ச்சிப் போககுத் தான் உலகத்தில் உள்ள பெண்களை ஒன்று இணைக்கும். இது தான் சமூக விடுதலைக்கு அடித் தளமாக

அமையும். மாற்றுப் பெண் விடுதலை அமைப்புக்களை உருவாக்க முடியும். பெண்கள் ஆண் ஆதிக்கத்தில் இருந்து விடுபடும் போதுதான் சமூக விடுதலை உறுதிப்படுத்தப்படும்.

இன்றைய முதலாளித்துச் சமூக அமைப்பில் உள்ள குடும்ப அமைப்பை மாற்றி அமைக்க வேண்டும் என்றும், அதற்கு பதிலாக ஜனநாயக சமத்தும், பன்முகத் தன்மை கொண்ட  குடும்ப அமைப்பை உருவாக்க வேண்டும் என்று தான் மார்க்சியம் கூறியதே ஒழிய, குடும்ப உறவுகளையும், குடும்பங்களையும் உடைக்கச் சொல்லவில்லை. தோழமை கொண்ட சமத்துவமான ஒரு புதிய சமூகத்தைத் தான் அமைக்க வேண்டும் என்று மார்க்சியம் வலியுறுத்துகின்றார். மனிதம், பாட்டாளி வர்க்க ஜனநாயகம், பன்முகத் தன்மை, புதிய கலை கலாச்சாரங்கள் பண்பாடுகள் போன்றவைகளை மையமாக வைத்து ஒரு மாற்றுக் கருத்தைக் கொண்ட சமூகமாக அமைய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்.

இவைகளை கருத்தில்க் கொள்ளாமல்ப் பெண் விடுதலை என்று கூறிக் கொண்ட உருவான போராட்டங்கள் யாவும் தோல்வியில் முடிந்தது.

இந்து மதத்தில் நிலவிய பாசி படிந்த புரையோடிய நிகழ்வுகளைச் சீர்திருத்தும் நோக்கத்துடன் உருவான மதம் தான் புத்த மதம் ஆகும்.

முதல் முதல்ப் பெண்விடுதலைப் போராட்டத்தை உருவாக்கியவர்கள் புத்த மதத்தைப் பின்பற்றிய பெண்கள் ஆகும்.

இந்தப் புத்த மதம் தான் சமூகத்தில் (இந்து மதச் சமூகத்தில்) உள்ள

புரையோடிக் கிடந்த கலைகலாச்சாரப் பண்பாடுகளைச் சீர்திருத்த நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்டத் தத்துவமாகும். இது இயங்கியல் நிலையான வாதமாகும். (சீர் திருத்தவதம்)

உதாரணமாகப் பெண்கள் மத குருவாக வருவது, விதவைப் பெண்ணுக்கு மறுமணம் செய்து வைப்பது போன்றவைகள் ஆகும். பெரிய பதவிகளை கொடுக்கும் சட்டமும். சமூக பாதுகாப்பு என்ற பெயரில் திருமணச் சட்டங்களும், கண்ணுக்குத் தெரியாத பல நிகழ்வுகள் யாவும் பெண்களை அடிமைக்கியதற்குப் பல சம்பவங்கள் உண்டு. இருந்தாலும் இந்த சமூகத்தில் சில நல்ல பண்புகளும், குணாம்சங்களும் உண்டு எனபதை மறுதலிக்க முடியாது.

தாலி (பவுண்) மத்தியதரப் பிரச்சனையாகும். இதை ஏழை மக்களுடன் போட்டுக் குழப்பக் கூடாது. இது மத்திய தரப் பெண்ணிலை வாதிகளின் போராட்டமாகும்.

இந்தியாவில் ஒரு ஏழைப் பெண்ணை ஏன் நீங்கள் மஞ்சள் கயிற்றைக் (தாலியக) கட்டி இருக்கின்றீர்கள் என்று கேட்ட போது. அப் பெண் கூறிய பதில் இதுதான். (இலங்கையில் பல பெண்கள் தாலி இல்லாமல் வாழ்வதை மறந்து விடக் கூடாது.)

இன்றைய உலகத்தில் உள்ள ஆண்கள் தங்கள் பார்வையாலும், சிந்தனையாலும் அசிங்கமாகப் (காம வெறியுடன்) பார்ப்பதை தடுப்பதற்காக இதை கட்டியுள்ளேம் என்று கூறினாள். அதாவது 80 சதவிதமான ஆண்கள் ஓர் அளவுக்கு மனிதாபிமானம் படைத்தவர்கள், சில நல்ல பண்புகளை கொண்டவர்கள் என்று கூறினாள்.

பிராஸ் நாட்டில் சடப் பொருள் உள்ப்பட சகலதையும் பெண், ஆண் என்று பிரிக்கப்பட்டு உள்ளது. எழுத்து மொழியிலும் கூட. பால் என்ற வார்த்தை இல்லாத பிரான்ஸ்சில்; வார்த்தைகள் இல்லை.

பெண்கள் தங்கள் அடக்கு முறைகளை இனம் கண்டு அதைத் தீர்த்து வைப்பதற்கு சமூகத்தில் புதிய தேடல்களைத் தேட வேண்டும். தேசம், பிரதேசம், சாதியம், வர்க்க முரண்பாடுகள், மதம், நிறம் போன்ற பல முரண்பாடுகளைக் கொண்ட சமூகத்தின் மத்தியில்த் தான் நாம் (பெண்கள்) வாழுகின்றோம் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு தங்கள் விடுதலைக்கான தேடுதலை மேற் கொள்ள வேண்டும். சகல பெண்களை மத்தியில் நம்பிக்கையையும், தோழமை உறவுகளையும் ஏர்ப்படுத்த வேண்டும். சமூகம், பிரதேசம் சாதி சார்ந்த பெண்களுக்குப் பல முரண்பாடான பிரச்சனைகள் உண்டு. இவைகளை ஒன்ரோடு ஒன்று இணைத்துப் போராடுவதற்கு தோழமை உறவு அவசியமாகும். அவை போலித்தனமாக இருக்கக் கூடாது. இந்த ஆண் மேலாதிக்க அதிகாரத்தால் மக்கள் மத்தியில் (சமூகத்தின் மத்தியிலும்) உருவாக்கப் பட்ட பகை முரண்பாடுகளை வைத்துக் கொண்டு ஏந்த நாட்டு பெண்களோ ? அல்லது மேல் தட்டப் பெண்களோ? அல்லது உழைக்கும் பெண்களோ? அடிமட்டப் பெண்களோ? நிற பேதம் கொண்ட பெண்களோ? சாதி சார்ந்த பெண்களோ? அல்லது N. பு. ழு. சார்ந்த பெண்களோ? பெண் விடுதலைப் போராட்டத்துக்குத் தலைமை தாங்குவது யார் என்று கூற முடியுமா. அல்லது இந்த ஆணாதிக்க அதிகார அரசியலில் பெண்கள் பங்கு எடுத்தால் பெண் விடுதலை கிடைக்குமா? சிந்தித்துப் பார்ருங்கள் முடிவு கிடைக்கின்றதா என்று. உலகத்தில் உள்ள சகல பெண்களின் பிரச்சனைகள் யாவும் சமூகம்

சார்ந்து தான் உள்ளது. பல பிரச்சனைகளும், அடிமைத் தனமும் பொதுவானவையாகும். இதனால் பெண்கள் சமூக விடுதலைக்குத் தலைமை தாங்க வேண்டும். மீண்டும் பெண் சமூக வழிகாட்டியாக வரும் போது சகல முரண்பாடுகளும் தீர்த்து வைக்கப் படும்.

புத்த மதப் பெண்களின் போராட்டத்தின் மூலம் மீண்டும் பெண்கள் ஆதிக்க அதிகாரத்துக்கு ஆரம்பமாகி விடும் என்று கருதிய பாண்டிய மன்னனும் அவர்கள் சார்ந்த மதங்களும் (ஆண் ஆதிக்கத் தன்மையுடைய) இணைந்து புத்த மதத்தை அழித்தார்கள்.

ஈழப் போராட்டம் உருவாகிய பின்பு பல பெண் விடுதலை அமைப்புக்கள் உருவாகியது. அவை ஆண் ஆதிக்க அதிகாரத்தின் பக்கமாக இயங்கிய படியால் இவர்கள் அழிக்கப்பட்டார்கள். பெண்களை இந்த ஈழ விடுதலைப் போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டது ஆண் ஆதிக்கம் கொண்ட மனித மிருகங்களின் கட்டளையை நிறைவேற்றுவதற்காகவும். இது போன்றுதான் சில மாற்று ஆண் இலக்கிய வாதிகளும் நடந்து கொள்ளுகின்றார்கள். (சில பெண் இவ் இலக்கிய வாதிகளான ஆண்களுக்கு பக்க பலமாக விளங்குகின்றார்கள். இவர்கள் பெண்கள் விடுதலை பேசினாலும் அவர்கள் ஆண் சார்ந்த பெண் விடுதலை வாதிகளே.)

எல்லாப் பெண் விடுதலை அமைப்புக்களும் ஆணின் சிந்தனைக்கு ஊடாகத்தான் உருவாகியவை. இதனால்த் தான் சில தீவிரவாதப் பெண் விடுதலை வாதிகள் ஆண்களின் சிந்தனைகளையும், ஆண்களையும் தங்கள் மத்தியில் வருவதை அறவே வெறுக்கின்றார்கள். இது தாங்கள் (பெண்கள்) சுயமாகவே சிந்தித்து முடிவு எடுக்க முடியாமல்ப் போனதால் ஏர்ப்பட்ட விரக்தி நிலை ஆகும் நல்ல சிந்தனைகள் யாரிடம் இருந்தும் உருவாகலாம். அதற்காக பெண், ஆண் என்று வேறுபடுத்திப் பார்க்கக் கூடாது. இச் சிந்தனையை நடைமுறைப் படுத்தும் போது தாங்களுக்குச் (பெண்களுக்குச்)

சாதகமான விடையங்களை பெண்கள் தங்கள் விடுதலைக்குச் சார்ந்ததாகவும் அமைத்துக் கொள்ள வேண்டும். தேவையில்லாதவைகளை புறம் தள்ளிவிட வேண்டும். அப்பொழுது தான் சரியான விடுதலைப் பாதையை வகுக்க முடியும்.

உலகத்தில் எந்த ஒரு பெண் விடுதலை அமைப்புக்கள் உருவாக்கப்படும் போதும் ஆண் ஆதிக்கம் இல்லாமல் உருவாக்கப்பட்ட அமைப்புக்களில் வளர்ச்சிப் போக்கில் சில பெண்கள் முன்னணிப் பாத்திரத்தை வகிப்பார்கள். (இவர்கள் ஆண் சார்ந்த பெண் நிலைவாதிகள்) இவர்களின் ஆதிக்கம் அமைப்பை ஆட்டிப் படைக்கும். (இது வெளிப்படையாக தெரிவதில்லை. அவ் ஆதிக்கம் ஒரு தோழமையுடன் தான் வெளிப்படும்.)

இப் பெண்கள் மூலமாகத் தான் அவ் ஆண் ஆதிக்கம் உள் நுழைகின்றது.

இதற்கு நல்ல உதாரணமாகப் பூரணி என்ற அமைப்பைக் கூறலாம். இதனால்த்தான் சூரியா என்ற பெண்விடுதலை அமைப்பு தனித்துவமாக இயங்க முடியாமல்ப் பல இன்னல்களைச் சந்திக்க நேரிட்டது.

எந்த விதமான ஆண் ஆதிக்கமும் சார்ந்து இல்லாமல் உருவாக்கிய பெண் என்ற விடுதலை இயக்கம் (வவுனியாவில்) தாங்கள் இயங்குவதற்குத் தேவையான வளங்களைப் பெருக்கிக் கொண்டு இயங்கினார்கள். அதிகமாக உழைக்கும் பெண்கள் தான் (அதிகமாக போதிய அளவு கல்வி அறிவு இல்லாதவர்கள்) அங்கம் வகித்தார்கள்.(பண்ணை, கடை, குடிசைக் கைத் தொழில்கள், விவசாயத்துக்கு உதவுவதற்கு இயங்திரங்கள் வாடகைக்கு

விடுவது போன்ற பல தொழிற் பாடுகள் மூலம் தங்கள் அங்கத்தவர்களின்

தேவைகளைப் பூர்த்தி செய்தார்கள். இதைப் பொறுக்க முடியாத ஆண் ஆதிக்க அதிகார வர்க்கம் 1983 ம் ஆண்டு வவுனியாவில் இடம் பெற்ற விமானப் படைத் தாக்குதல் மூலம் இப் பெண் என்ற அமைப்பை முழுமையாக அழித்தார்கள். காந்தீயம் என்ற அமைப்பையும் இயங்கவிடாது தடுத்தார்கள். இதன் மூலம் இப் பெண் அங்கத்தவர்களுக்கு அரசு மூலம் நெருக்கடி ஏர்ப்பட்டது இதனால் இப் பெண்கள் தங்கள் சமூகப் பாதுகாப்புக்காக இந்த ஆண் ஆதிக்க ஈழ அமைப்புக்களுடன் இணைந்து கொண்டார்கள்.

குடும்பங்கள் மத்தியில் இன்று நாகரிகத்தாலும், மனிதம் பேசுவதாலும், குடுமப்த்தின் மத்தியில் ஜனநாயகத்தைப் பயன் படுத்துவதாலும், தங்களை சமத்துவ வாதியாக கருதுவதாலும், மாற்றுக் கருத்து மார்க்சியம் பேசினாலும் நட்பு அன்பு தோழமை போன்ற உறவு பரிமாற்றத்தாலும் பல குடும்பங்களில் பெண்கள் தோழமையுடன் அடிமையாக்கப்பட்டு உள்ளார்கள். இது வெளிப் படையாக இவ் அடிமைத்தனம் தோன்றுவது இல்லை.

பெண்-ஆண் உறவுதான் (உடல் உறவு) பெண்களை அடிமையாக்குவதற்கு மூல காரணமாகும். ஆண்களின் உடல் அமைப்பின் படி உடல் உறவு கொள்ள கூடியது அதிக நேரம் 30 நிமிடம் ஆகும்.. ஒரு பெண்ணின் உடல் அமைப்பின் படி  உடல் உறவுக்குக் குறைந்தது 1.30 நிமிடங்கள் தேவைப்படும். இதை பலவீனமாக்கி ஆணாதிக்க சமூகம் கொச்சத்தனமானப் பேச்சிப் பெண்களை அடிமையாக்கியுள்ளார்கள். இதை உணர்ந்து பெண் தன்னை விடுவித்துக் கொண்டால் பெண் அடக்கு முறையில் இருந்து வெளிவரலாம்.

ஆண்களின் பட்டம் படிப்பு, பொருளாதாரம் போன்றவைகளில் இருந்து வெளிவருவதன் மூலம் தான் பெண் தன் அடக்கு முறையில் இருந்து

வெளிவர முடியும். அப்போது தான் பெண் சுதந்திரமாகச் சிந்திக்க முடியும். இன்று வரை உலகத்தில்ச் சுதந்திரமாகச் சிந்தித்து பெண்கள் தங்கள் விடுதலைக்காக முன் வந்து சமூக அரசியலுக்குள் பிரவேசிக்க வில்லை. அப்படியான ஒரு சமூக அரசியல் நிலையை பெண்கள் தான் உருவாக்க வேண்டும்.

சகல மனித அடக்கு முறைகள் சமூகத்துடன் மக்களுடனும் பிணைக்கப்பட்டு உள்ளது. இதனால் தனிப் பிரச்னையை மையமாக வைத்து போராடினால் சிக்கலாக அமையும். சமூக முரண்பாடுகள், மானிட ஏற்றத் தாழ்வுகள், நிற பேதங்கள், தேசம், பிரதேச முரண்பாடுகள், இன மத சாதி ரீதியான முரண்பாடுகள் சமூகத்துக்குள் புதைந்து இருப்பதை நாம் புரிந்து கொண்டு எமது விடுதலையை நாமே தீர்மானிக்க வேண்டும். மற்றவர்களின் சிநதனைக்கு அடிபணியக் கூடாது. எப்பொழுதும் ஜனநாயகம், மனிதன், பன்முகத் தன்மை போன்றவற்றுக்கு அதி முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நாம் யார் என்ற கேள்விக்கு சமூகத்துடன் இணைந்தது விடை கிடைத்த பின்தான் நாம் போராட்டத்தில் இணைய வேண்டும். அதன் பின் எங்கள் மீது யாரும் சவாரி செய்யமுடியாது. தேளிவு ஏற்படும் மட்டும் சகல விடையங்களையும் கேள்விக்கு உட்படுத்த வேண்டும். தேடுதலை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் சரியான மார்க்கத்தை அடையமுடியும். பெண்கள் தங்கள் விடுதலையை கவனமா சிந்தித்து கேள்விகள் மூலம் தேடுதலை மேற் கொள்ள வேண்டும். இதனால் ஒர் அளவுக்கு ஆணாதிக்கத்தில் இருந்து விடுபட முடியும். முழுமையான சமூக மாற்றத்துக்குப் பின் தான் பெண் உட்பட சகல மானிடர்களும் விடுதலை அடைந்து சுதந்திர ஜனநாயகத்தை மதிக்கும் மானிடராக வாழ முடியும். அப்போது தான் இன்றைய சமூக கட்டுமானங்கள் உதிர்ந்து சமூகம் புதிய வடிவத்தை எடுக்கும். சமூ விடுதலையை மையமாக வைத்துக் கொண்டுதான் பெண்கள் தங்கள் விடுதலைப் பயணத்தை மேற்கோள்ள வேண்டும்.

பெண்கள் சுதந்திரமாக தனித்துவமாக இயங்கத் தொடங்க வேண்டும். சீர்திருத்த வாதத்துடன் (இயங்கியல் நிலையான வாதம்) இயங்கத் தொடங்கி இயங்கியல் வாதமாக பரிணாமம் அடைய முடியும்.

பெண் முதலில் ஜனநாயக முறையில் சுதந்திரமாக தனித்துவமாக பன்முகத் தன்மை கொண்ட முடிவுகளை எடுக்க வேண்டும். இதன் வெற்றிதான் பெண் விடுதலையை வெற்றிக்குக் கொண்டு செல்லும். ஆண் ஆதிக்கச் சமூகத்தில் இருந்து விடுதலை ஏர்ப்படும். பொருளாதாரமும், உறவுகளும் இரண்டாவது பச்சமாக இருக்க வேண்டும். (இவைகள் தான் பெண்களை அடிமையாக்க ஆண் வர்க்கம் பயன்படுத்துதும் முதலாவது ஆயுதம்) பாலிய உறவகளைக் கூட உங்களுக்குச் (பெண்கள்) சார்பாக மாற்ற வேண்டும். அப்போது தான் ஆண் ஆதிக்க வர்க்கத்தை அடிபணிய வைத்து சமத்துவத்தை உருவாக்க முடியும் இதன் கூடாக மற்றைய சமூகக் குறைபாடுகளையும் நீங்கிவிட முடியும். இதன் மூலம் சமத்துவமான புதிய சமூகத்தையும், புதிய கலை கலாச்சாரங்கள் இலக்கியங்கள் பண்பாடுகள் போன்றவைகளை உருவாக்க முடியும் இவைகளை உணர்ந்து சிந்தித்து செயல்ப்பட்டால் இன்று நிலவும் பயங்கரவாதத்துக்கு (ஆணாதிக்கத்துக்கு) முற்றுப் புள்ளி வைக்களாம். இதன் பின் மானிட இனம் ஜனநாயகச் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்களாம்.

மேல் கூறப்பட்ட பல அடக்கு முறைகளில் இருந்து பெண்கள் விடுதலை அடைவதற்கு சமூக சாரர்ந்த  விடுதலை அரசியலுக்கு பெண்கள் முன்

வருவதுதன் மூலம் தான் ஆணாதிகத்தை உடைத்து எறிய முடியும்.

இன்று வரை ஆணாதிக்கம்; சாரந்த முதலாளித்துவச் சமூக அரசியலுக்குள் பெண்கள் போராடுவதால்த் தான் இன்றைய சகல போராட்டங்களும் ஆண் ஆதிக்க அதிகார அரசியல் கொண்ட போராட்ங்கள ஆகும். இது தான் இன்று உலகம் எங்கும் இடம் பேறும் போராட்டங்கள் ஆகும்.

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Comments are closed.