இலங்கையில் இன்று இரு பெரும் பயங்கரவாதத்தின் மத்தியில் வாழ்ந்து கொண்டு இருக்கும் தமிழ்ப் பேசும் மக்களுக்கு அதிகாரங்கள் வேண்டுமா? அல்லது சுதந்திரமான வாழ்வியல் வேண்டுமா? யாருக்கு அதிகாரங்கள் தேவையா? இத் தீர்வுத்திட்டத்தைப் பயன்படுத்தி மீண்டும் அதிகார மேலாதிக்கச் சக்திகள் தமிழ்ப் பேசும் மக்களைத் தாங்கள் அடிமையாக்கப் போகின்றார்களா? அல்லது சுதந்திரமான வாழ்வியலை அம் மக்கள் அனுபவிக்க வளி அமைக்கப் போகிறார்களா?
பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்ற நிலையில்த் தான் தமிழ்ப் பேசும் மக்களின் வாழ்வியல உண்டு என்பது ஜதார்த்தமான உண்மையாகும்.
இலங்கையில் வாழுகின்ற தமிழ்ப் பேசும் மக்கள் தான் இன்றைய சூழலில் என்ன தேவை என்பதைத் தீர்மானிக்க வேண்டும் வருங்காலத்தில் தங்களுக்கு என்ன தேவைகள் என்பதையும் அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
வெளி நாடுகளில் சுகபோகமாக வாழ்ந்து கொண்டு இருக்கும் தமிழர்களோ, அல்லது ஜனநாயகம் என்ற பெயரில் இயங்கும் மனித உரிமை அமைப்புக்களோ, அல்லது வெளி நாட்டு அரசோ அம் மக்களின் சார்பாக முடிவுகள் எடுத்தால் மீண்டும் மிகப் பெரிய பயங்கரவாதத்துக்குள் தமிழ்ப் பேசும் மக்களைச் சிக்க வைக்க எடுக்கும் முடிவாகும். நீங்கள் மக்கள் ஜனநாயகத்தை மதிப்பவர்களாக இருந்தால் அம் மக்கள் ஒரு நிரந்தரத் தீர்வை எட்டுவதற்கு பக்க பலமாக இருங்கள்.
பஞ்சபூதங்களான நீர் மூன்று முறைதான் பொறுக்கும் என்பது தமிழர்களின் ஐதிகமாகும். ( ஒருவன் நீரில் மூழ்கினால் மூன்று முறை உயிருடன் மேலே தள்ளும், நான்காவது முறைதான் அவன் உயிரைக் குடிக்கும். அதுபோல்த தான் தமிழர்களின் வாழ்வியலும் உண்டு) தமிழ் மேலாதிக்க அதிகார வெறியினால் கடந்த காலத்தில் மூன்று முறை தமிழ்ப் பேசும் மக்களின் சுதந்திர வாழ்வியலை அழித்துள்ளோம். ( பண்டா- செல்வா ஒப்பந்தம், இந்தியா- இலங்கை ஒப்பந்தம், சந்திரிக்காவின் தீர்வுத் திட்டம்). இவைகள் அழிக்கப்பட்டதன் விழைவு தமிழ்ப் பேசும் மக்கள் 30 வருடங்களுக்கு மேல்ப் பயங்கரவாதத்துக்குள் மூழ்கடிக்கப்பட்டு விட்டார்கள். இக் கூற்றையும் உங்கள் கவனத்துக்கும், சிந்தனைக்கும் விடுகின்றேன்.
இத் தீர்வுத்திட்டம் நிரந்தரத் தீர்வைப் பெறுவதற்கு ஆரம்பப் படி என்று எண்ணிக் கொண்டு இத் தீர்வை விமர்சிக்கவும்.
சகல விதமான அதிகாரங்கள் யாவும் கீழ் மட்டத்தில் இருந்து மேல்த் தட்டுவரை போக வேண்டும். அதுதான் ஜதார்த்தமான ஜனநாயகத்தைத் தோற்றுவிக்கும்.
கூழுக்கே வளி இல்லாது அவதிப்படும் இலங்கைத் தமிழ்ப் பேசும் மக்களுக்கு நாம் புரியானி தருகின்றோம் என்று கூறுவது யாழ் உயர் மேலாதிக்க மேட்டுக்குடிச் சிந்தனையாகும்.
ஒரு மனிதனின் நடவடிக்கைகளும், செயற்பாடுகளும் தான் அம் மனிதனை யார்? என்று தீர்மானிப்பது.
வெளி நாடுகளில் அகதி அந்தஸ்துப் பெறுவதற்கு 99 வீதமானோர் புலிகளின் மீது அபாண்டமான பழிகளைச் சுமத்தித்தான் அகதி அந்தஸ்துப் பெற்றவர்கள்.
இதில் உண்மையானவர்கள் என்னை மன்னிக்க வேண்டும். இவர்கள் ஈழப் பயங்கரவாதம் சார்ந்த எந்த நடவடிக்களையும் உட் புறமாகவோ அல்லது வெளிப் புறமாகவோ பயத்தின் காரணமாகவோ ஆதரிக்க மாட்டார்கள்.
பிழையோ சரியோ இன்று வரை தமிழ் மக்களின் உரிமைக்காக ஈழப் பயங்கரவாதப் போராட்டத்தை நடத்திய ஈழப்பயங்கரவாதிகள், பல உயிர்த் தியாகங்களைச் செய்துள்ளார்கள். இத் தியாகிகளின் முகங்களை மறைத்துத் தங்கள் முகங்களைப் பிரகாசிக்க வைப்பதற்கு வெளி நாட்டில்ப் பலர் முன்னிலையில்ப் உள்ளார்கள். அனால் இவர்களைப் புலிகளால் துரோகிகள் என்று கூறி மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள். ஈழப் பயங்கரவாதிகள் இவர்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், தமிழ்ப் பேசும் மக்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாதவர்கள் வைகுண்டம் போய்க் கோழி பிடித்த கதை போல் உள்ளது.
தமிழ்ப் பேசும் மக்களுக்கு நன்மை கிடைக்குமா அல்லது கிடைக்காதா என்பதை விட, இத் தீர்வுத்திட்டத்தை எதிர்ப்பவர்களுக்கு அது பிரச்சனை அல்ல. தங்களின் மேலாதிக்கச் சக்திகளுக்கு நன்மை கிடைக்க வில்லை என்பது தான் பெரும் பிரச்சனையாக உள்ளது.
இன்று இலங்கையில் வாழுகின்ற தமிழ்ப் பேசும் மக்களின் வாழ்வியல், அரசியல். சுதந்திரமாகச் சிந்திக்க முடியாத நிலை, உரிமைகள் அனைத்தும் (மனித இருப்பு உட்பட) இழந்த நிலையிலும், அம் மக்களின் அவல நிலையையும் வைத்து இத் தீர்வுத் திட்டத்தை ஆய்வு செய்ய வேண்டும்.
கடந்த காலத்தில் உருவாக்கப்பட்ட 3 நிரந்தரத் தீர்வுத்திட்டங்கள் ஏன்?
( பண்டா, இந்தியா, சந்திரிக்கா), நிறைவேற்ற முடியாமல்ப் போனதற்கான காரண காரியங்களை ஆராய்ந்து இத் தீர்வுத்திட்டங்களை ஆய்வு செய்யுங்கள்.
இதை எதிர்ப்பவர்கள் யார்?
1. மீண்டும் தாங்கள் இலங்கை ஆளும் அதிகாரத்தைக் கைப்பற்றும் எண்ணத்தில்ப் பௌத்த சிங்கள இனவாத அமைப்பான யு. என். பி யும், இவர்களுடன் ஒட்டிக் கொண்டு இருந்தால்த் தாங்கள் பதவிக்கு வர முடியும் என்று கருதும் சில சிறுபான்மை அமைப்புக்களும், யாழ் மேலாதிக்க மையவாதத் தலைமையும் (புலிகள் அல்ல)( இத் தீர்வுத்திட்டத்தின் மூலம் தமிழ்ப் பேசும் மக்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டால் தங்களின் இனவாதக் கருத்துக்கள் எடுபடாமல் போய்விடும் என்பதால்)
2. இலங்கை மக்களால்த் தூக்கி எறியப்பட்ட மார்க்சிய இடது சாரிகள் ஒரு சிலர், இன்றுவரை தங்களை மார்க்சிய இடதுசாரி முத்திரை குத்திக் கொண்டும், அதிகார வர்க்கத்தில் இருந்து பணத்தைப் பெற்றுக் கொண்ட நபர்களும்.
3. வெளி நாட்டுப் பணத்தின் மூலம் சுகபோகமாக வாழ்ந்த N. பு. ழு. வாதிகளும், இதன் மூலம் தங்களை ஒரு மாற்றுக் கருத்து வாதிகள் என்றும், மனித உரிமை வாதிகள் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்ட தமிழ் மாற்றுக் கருத்து வாதிகளும்
4. தமிழ்ப் பேசும் மக்களின் யதார்த்தமான நிலையை உணர்ந்து கொள்ளமல் (இன்று இலங்கையில் புரட்சி ஏற்படும் சூழ்நிலை உள்ளது என்று கருதும்) மார்க்சியத் தத்துவத்தை அப்படியே விழுங்கிய (மக்கள் புரிந்து கொள்ள முடியாத சொல்லாடல்களைப் பயன் படுத்துவது) நபர்களும். தான்
இத் தீர்வுத் திட்டத்தை எதிர்க்கின்றார்கள்.
இவர்களுடன் விக்கினேஸ்வரன் என்ற நபரும், அவர்சார்ந்த சில நபர்களும் தீர்வுத் திட்டத்தை மகிந்தா கொண்டு வந்ததற்காக எதிர்க்கின்றார்கள்.
இந் நபர் கடந்த 6 மாதத்துக்கு முன் இச் சர்வ கட்சிக் குழுவை ஆதரிப்பதற்கு வெளி நாடுகளில் உள்ள சில நபர்கள் மூலம் அமைப்புக்களைக் கட்டினார்.
தான் இன்று சந்திரிக்காவுடன் மத்தியானச் சாப்பாடு சாப்பிட்டதாகவும் இரவுச் சாப்பாடு பிரதமருடனும், மகிந்தாவுடன் தேனீர் அருந்தியதாகவும் பெரும் கதையாடல்களை அவிட்டு விடுவார். இதை உண்மை என நம்பி சில வெளி நாடுகளில் உள்ள நபர்கள் அவருக்காக வேலை செய்தார்கள். (இவர்கள் தான் இன்று இத் தீர்வுத் திட்டத்தை எதிர்க்கின்றவர்கள்)
இன்றைய அரசியல் டக்கிலஸ்சின் செல்வாக்குள்ள மனிதராக இருப்பதாலும் டக்கிலஸ் வைத்த தீர்வுத்திட்த்தை முன் வைத்தாலும் அவர் மீது ஏற்பட்ட காலப்ப்புணச்சியாலும் ஏற்கனவே இருந்த முரண்பாட்டாலும் (ஜனாதிபதித் தேர்தல்க் காலத்தில் சந்திரிக்கா தனது வாரிசினை கொண்டுவருவதற்கு முழு ஆதரவை இவ் விக்கினெஸவரன் கொடுத்ததால் டக்கிலஸ்க்கும் இவருக்கும் முரண்பாடுகள் உருவாகி டக்கிலசை விட்டு விலகிச் சென்றார்.
ஈழ விடுதலையில் இவர் பங்கு என்ன தியகங்கள் என் என்று யாருக்கம் தெரியாது.
இவர் ஒரு கலாநிதிப் பட்டம் பெற்றவர். வளவு சிங்களப் பெண்னை திருமணம் செய்தவர், இரு பிள்ளைகளும் உண்டு இவர்கள் இன்று வெளிநாடுடுல் வாழுகின்றார்கள். இவர்களுடன் அவருக்குக் குடும்ப விரிசல் உண்டு என்ற செய்தியும் உண்டு. (இது எவ்வளவு உண்மை பொய் என்று தெரியாது. யாழ் மேலாதிக்கமும், யாழ் ஆண் ஆதிக்கமும் தான் இவ் விரிசலுக்குக் காரணமாக இருந்ததாக ஒரு தகவல் கூறுகின்றது.) 1983 ம் ஆண்டு நடந்த இனக் கலவரத்துக்குப் பின் இவர் இந்தியாவில் இயங்கிய ஒபர் (சந்திரகாந்தனின் அமைப்பில்) என்ற அமைப்பில் வேலை செய்ததாகவும் அவர்களுடன் முரண்பட்டுக் கொண்டு சிங்கப்பூருக்குச் சென்று தொழில் புரிந்ததாகவும், இவரை டக்லஸ் அங்கு சந்தித்து மீண்டு அவரை இலங்கைக்குக் கூட்டிவந்ததாகவும் ஒரு தகவல் குறிப்பிடுகின்றது. (தானக்கு உதவிக்காக). இதை பயன் படுத்தி இவர் அரசு உயர் மனிதர்களுடன் ஒட்டிக் கொண்டார். (இது போல்த்தான் ஓபர் மூலம் இந்தியாவில் உள்ள பெரும் புள்ளிகளைத் தன்வசப்படுத்திக் கொண்டார்.)
இவர் டக்லஸ்வுடன் முரண்பட்ட பின் மற்றைய மாற்று அமைப்புக்களுடன் இணைந்து ஒரு புதிய ஈழ விடுதலை அமைப்பை உருவாக்கினார். பின் அவர்களுடன் தனிப்பட்ட முரண்பாடுகளால் அந்த அமைப்பைத் தன்வசப்படுத்திக் கொண்டார். இது விடையமாக ஆனந்த சங்கரியண்ணையை விசரித்தால் இவரைப் பற்றிய பல உண்மைகள் புரியும்.
தான் அரசுடன் வைத்து இருந்த கற்பனையான செல்வாக்கு இல்லாமல் போகும் போது இத் தீர்வுத்திட்டத்தை எதிர்க்கின்றார்.
இவரின் தனிப்பட்ட வாழ்க்கையை எழுதியதற்கு மன்னிக்கவும். (இதை குறிப்பிடுவதற்கு முக்கிய காரணம் வெளி நாட்டில் இவருடன் இயங்கும் சில நண்பர்கள் சிங்கள இனத்தையும், அம் மொழியையும் இனக் குரொதமாகப் பார்கின்றபடியால்த் தான்). இவரின் ஈழ விடுதலை வரலாற்றை அறிவதற்குச் சில தகவல்களைத் தந்துள்ளேன்.
இவர்களின் குழப்பம் மீண்டும் ஒரு முறை தமிழ்ப் பேசும் மக்களைப் பயங்கரவாதத்துக்குள் கொண்டு செல்கூடாது என்பதற்காகத்தான் தனி மனித வாழ்வைக் குறிபிட்டுள்ளேன். நான் குறிப்பிட் விடயங்கள் பிழையாக இருப்பின் சுட்டிக்காட்டுங்கள் நான் திருத்திக் கொள்கின்றேன். நான் சாதாரண மனிதன் தான் நான் தந்த விடையங்கள் சரி என்று முடி வெடுக்க கடவுள் இல்லை. வாசகர் அகிய நீங்கள் நான் தந்த விடையங்களை ஆய்வு செய்யுங்கள், பக்க சார்பின்றிச் சிறந்த முறையில் விசாரிங்கள் உண்மைகள் வெளிவரும் என் பிழையைச் சுட்டிக்காட்டுங்கள் நான் திருத்திக் கொளகின்றேன்.
2008- ஜனவரி 23 ம் திகதி இலங்கையில் அதி உச்ச நிலையில் இருந்த இன ரீதியான பயங்கரவாதத்துக்குத் தடைக் கல்லாக இந்த ஏ. பி. ஆர். சி யின் இடைக்காலத் தீர்வுத் திட்டமாக அமைந்துள்ளது.
பல மொழி பேசும், பல் கலாச்சாரம், பல மதங்களை உள்ளடக்கிய மக்கள் வாழும் இடம் தான் தேசம் அல்வது நாடாகும். ஆகும். மேற் குறிப்பிடப்பட்ட தேசத்தை ஒரு மொழி, ஒரு கலச்சாரம் ஒரு மதம் போன்றவைகளை (மக்களை) வைத்துத் தேசியம் என்று கூறுவது அபத்தமாகும். பிரிந்து போவது என்பது மிகப் பெரிய அபத்தமாகும். ஒரு தேசிய இனம் என்று கூறி அற்குத் விடுதலையைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணச் செயற்பாட்டில் இயங்குவது மேலாதிக்க வாதிகள் தங்களை ஆளும் அதிகார வர்க்கத்தை வளர்த்துக் கொள்வதற்கான முயச்சி யாகும்.
இந்த நடவடிக்கைகள் பயங்கரவாத்தில் முடிவடையும். இதனால் அம் மக்கள் அனுபவித்த சகல சுதந்திரங்களையும், மனித இருப்புக்களையும் இழந்து அடிமைகளாக வாழ வேண்டிய நிலைக்கு ஆளாவார்கள்.
இம் மக்களை அத் தேசத்தில் உள்ள சகல அதிகார மேலாதிக்கச் சக்திகள் அடிமைகளாக நடத்துவார்கள்.
உதாரணம் ஈழ விடுதலைப் போராட்டங்களும், விடுதலை அமைப்புக்களும், ர~;யாவில் இடம் பெற்ற எதிர்ப் புரட்சி நடவடிக்கைகளும்.
ஏ. பி. ஆர். சி யின் இடைக்காலத் தீர்வு முடிவான முடிவு அல்ல. இது நிரந்தரத் தீர்வை எட்டுவதற்காக வைக்கப்பட்ட முதற் படி.
இலங்கையில் உள்ள தமிழ்ப் பேசும் மக்களின் சுதந்திரத்தை அழித்து இந்த இடத்தில் முள்ளும், கல்லும், பீங்கான ஓடுகளும் நிறைந்து இருந்த இடத்தைச் சுத்தம செய்து மக்களின் சுதந்திர விடுதலைக்குப் பாதை அமைத்துக் கொடுத்தது இந்த இடைக்காலத் தீர்வுத் திட்டம்.
இவ் விடையமாக அத் தலைவர் கூறியிருப்பதை நாம் முதலில் அவதானிகக் வேண்டும்.
இதை விட்டு விட்டு சிங்கள அரசு தமிழ்ப் பேசும் மக்களுக்கு ஒரு தீர்வுத்திட்டததை வைக்காது என்று ஆணித்தரமாகக் கூறிப் பயங்கரவாதத்தை வளர்த்தவர்களின் முகத்தில்க் கரி பூசியதால், அவர்களின் பிழையான அரசியல் சித்தாந்தத்தின விழைவால் இத் தீர்வுத்திட்டத்தைப் பிழையான தீர்வுத் திட்டம் என்றும், நாம் 30 வருடங்கள் நடத்திய போராட்டங்கள், அதன் இழப்புக்கள் என்னாவது என்று கதை விடத் தொடங்கிவிட்டார்கள்.
இவர்கள் இந்தீர்வுத் திட்டம் வருவதற்கு முன்பு தாங்கள் ஒரு மார்க்சியவாதிகள் என்றும், முற்போக்கு வாதிகள் என்றும், மாற்றுக் கருத்து வாதிகள் என்றும் கூறிக் கொண்டவர்கள்.
விடுதலைப் புலிகள் இவ் தீர்வுத் திட்டத்தைப் பிழை என்று கதைத்தி இருந்தால் அதில் ஒரு நியாயப்பாடு உண்டு என்று ஒரு வாதத்துக்காக எடுத்துக் கொள்ளாலம்.
விடுதலைப் புலிகள் இத் தீர்வுத்திட்டத்தை பிழை என்று கூற வில்லை அங்கு உருவாகும் நிர்வாக அலகுகளைத் தங்களிடம் கையளிக்கும் படியும், தாங்கள் துரோகி என்று கூறியவர்களின் கையில்க் கொடுக்கக் கூடாது என்பதற்காக இத் தீர்வுத் திட்டத்தைப் பிழை என்கின்றார்கள்.
இன்றையத் தமிழ்ப் பேசும மக்களின் பிரச்சனைகளையும், அவர்களின் சமூக வாழ்வியலையும் ஒரு சிறு துளி கூடப் புரிந்து கொள்ள முடியாத சில மேலாதிக்க நபர்கள் தான் இத் தீர்வுத் திட்டத்தை அதி வேகமாக எதிர்க்கின்றார்கள்.
எதிர்ப்பவர்கள் பின வருவேர்.
1. டக்லஸ் மீது ஈகோ கொண்ட நபர்கள். ( இத் தீர்வுத் திட்டத்தைக் கொண்டு வருவதற்கு அரும் பாடுபட்டதுவும் அல்லாமல் மக்களுடன் மக்களாக நின்று சேவை புரிவதாலும்.) எந்த விதமான இடையூறின்றி இத் தீர்வுத்திட்டம் வெற்றி பெற்றால் டக்லஸ் இலங்கை வரலாற்றில் ஒரு நாயகனாக விளங்குவார் என்பதாலும்;.)
ஒருவன் ஜதார்த்தமான சமூக ஒட்டத்துடன் இணைந்து ஒடுவான் ஆனால் அவன் அவ் வரலாற்றின் நாயகன். இது லெலின் கூற்று ஆகும்
2. டக்லஸ்ற்கு எதிராகச் செயற்பட வேண்டும் என்று கங்கணம் கட்டித் தனக்காக வெளி நாடுகளில் (தன் பண பலத்தால்) சில யாழ்ப்பாண வாதிகள் தான் கடுமையாக எதிர்க்கின்றார்கள்
தமக்கு இரு கண்கள் போனாலும் எதிரிக்கு மூக்குப் போக வேண்டும் என்று கருதுபவர்கள் தான் இவர்கள். வீதியில்ப் போன கரட்டி ஓணானை சீலைக்ககுள் விட்ட கதை போல் உள்ளது. டக்லஸ் குத்கிக் குடையிது என்று கருதாமல்த் தனது தமிழ்ப் பேசும் மக்களின் விடுதலையையும், உரிமைகளையும், சுதந்திரத்தையும் பெற்றுக் கொடுக்க வேண்டும் ஓரே கொள்கையுடன் செயற்பட்டதன் பலாபலன் தான் இத் தீர்வுத்திட்டம்.
இதனால் ஏற்பட்ட காலப்பூணச்சியால்த் தான் இவர்கள் எதிர்க்கின்றார்கள் இதற்கு மக்கள் அபிலாசைகள் என்று முலாம் பூசுகின்றார்கள். ( மக்கள் எனபது இவர்கள் தான்) இன்று தமிழ் மக்கள் அனுபவிக்கும் துன்பம் துயரங்களை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்பதே ஜதார்த்தமான உண்மையாகும்.
இன்றைய இலங்கையின் பிரதான பிரச்சனையையும். தமிழ்ப் பேசும் மக்கள் எதிர் கொண்டுள்ள பிரச்சனைகளையும் புரிந்து கொள்ளாமலும்,
ஏ. பி. ஆர். பி தலைவர் கூறிய விடையங்களையும், ஜனாதிபதி கூறும் விடையங்களையும். இந்தியா போன்ற வெளிநாடுகளின் கூற்றுக்களையும் விளங்கிக் கொண்டார்களோ தெரியவில்லை, ஆனால் இத் தீர்வுத் திட்டத்தைப் பற்றிப் பெரும் கதையாடல்களைப் பேசுகின்றார்கள்.
இவ்வளவு காலமும் அதிகாரம் மேல் இருந்து தான் கீழ் வந்தது. இத் தீவுத்திட்டத்தின் மூலம் அதிகாரங்கள் கீழ் இருந்து மேலே போகப்போகின்றது.
இவ்வளவு காலமும் இருந்த நடை முறை தலை கீழாக வரும் போது மேலாதிக்க அதிகார சக்திகளுக்குக் குத்தும் குடையும் தான் இவை தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
இவ் தீர்வுத் திட்டம் ஜதார்த்தமான ஒன்றாகும். இதற்குச் சீனப் புரட்சி உதாரணமாகும்.
கிராமத்தில் வாழும் சமூக மக்கள், நகரத்தில் வாழும் சமூகங்களும் மக்களும், தங்களைத் தாங்கள் ஆளுகின்ற தன்மையை அடைகின்றார்கள்.
கிழக்கு மக்களின் வாழ்வியல் சிறப்பாகவும், கிழக்கு மண் அபிவிருத்தி அடைய வேண்டும் என்று அன்று கருணா எடுத்த முடிவு இதன் அடிப்படையில்தான். ஆனால் கருணாவின் தவறான நடவடிக்கை அவரைப் பிழையான இடத்துக்குக் கொண்டு சென்றது.
கருணாவின் அணகு முறை இறைய இத் தீர்வுத் திட்டத்தைச் செயற்படுத்துபவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்.
ஆயுதங்கள் ஜதார்த்தமானத் தீர்வுகளை கொண்டு வரப் போவதில்லை. மக்கள்- சமூக வாழ்வியலின் அழிவுகளைத் தான் கொண்டு வரும்.
மனிதன் ஆரம்ப காலத்தில் ஆயுதம் அவசியப்பட்டது. (பலமுள்ள மிருகங்களிடம் இருந்து மனிதன் தன்னைப் பாது காத்துக் கொண்டான். சில சாதுவான மிருகங்களை மனிதன் தனக்கு உதவியாக்கச் செயற்படுத்தினான்). ஆனால் இன்று ஆயதங்களைப் பாதுகாக்கப் புதுப் புது (பலம் பொருந்திய) ஆயுதங்களைக் கண்டு பிடிக்கின்றார்கள். இது மேலாதிக்க ஆளும் அதிகாரத்தைப் பாது காப்பதற்காக.
இத் தீர்வுக் குழவில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அமைப்புக்கள் தான் அங்கம் வகிக்க முடியும் என்ற தீர்மானத்தையும் தாண்டிச் சகல அமைப்புக்களையும்( தமிழ், முஸ்லீம், சிங்கள) இணைந்து அவர்களின் கருத்துக்களையும், ஆலொசனைகளைக் கோட்டுக் கொண்டதன் மூலம் இந்த
ஏ. பி. ஆர். சி. அமைப்பு ஜனநாயகத்தை மதிக்கின்ற அமைப்பு என்பது புலனாகின்றது.
இவ்வளவு காலமும் தமிழ்ப் பேசும் மக்களுக்காக உருவாக்கப்பட்ட தீவுத்திட்டங்களை
(பண்டா- செல்வா ஒப்பந்தம், இந்தியா- இலங்கை ஒப்பந்தம, சந்திரிக்காவின் தீர்வுத் திட்டம்) குழப்பியவர்கள் சிங்கள பௌத்த இனவாதத் தலைமையும், யாழ் உயர் மேலாதிக்க மேட்டுக்குடித் தலைமையும், யாழ் மையவாதத் தலைமையும், ஈழப் பயங்கரவாதத் தலைமையும் ஆகும். இன்று இவர்களுடன் இணைந்து விட்டார்கள் முற்போக்கு மாற்றுக்கருத்து வாதிகள் என்று தங்களுக்கு முத்திரை குத்திக் கொண்ட தமிழர்களும் ஆகும். (பௌத்த இனவாதச் சிங்களத் தலைமைகளைத் தவிர்ந்த மற்றைய சிங்களத் தலைமைகள் இவ் இனவாதப் பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைக்க முன் வந்துள்ளார்கள்.
இத் தீர்வுத்திட்டத்தில்க் கூறிய விடையங்களைத் தமிழ்ப் பேசும் மக்களின் சார்பாக அவதானியுங்கள், இச் சிங்களத் தலைவர்கள் எனன் கூறுகின்றார்கள் என்று கவனத்தில எடுங்கள். வெளி நாட்டு அரசுகள் என்னத்தை கூறுகின்றார்கள் என்பதை அவதானியுங்கள் பின் உங்கள பெரும் கதையாடல்களைக் கூறுங்கள்.
அன்றில் இருந்து இன்று வரை தமிழ் மேலாதிக்க அதிகார வர்க்கம் (புலிகள் உட்பட) இதே பாணியில்தான் செயற்பட்டுத்தான் தமிழ்ப் பேசும் மக்களைத் தங்கள் அதிகாரத்துக்குள் கட்டுப்படுத்தினார்கள். புலிகள் கிராம ரீதியாகச் செயற்பட்டபடியால்த் தான் (இக் கிராமங்களில் உள்ள மேலாதிக்க வாதிகளால்) ஒரு பலம் மிக்க அமைப்பாக வளர்ந்தது. புலிகளின் பிழையான போக்கு (யாழ் மையவாதத்தை காப்பற்ற எடுத்த முயற்சி) புலிகளைப் பயங்கரவாதிகளாக மாற்றினார்கள். மற்றைய ஈழ விடுதலை அமைப்புக்கள் யாழ் நகரை மையமாக வைத்து இயங்கியதால் மக்களால் ஒதுக்கப்பட்டார்கள, புலிகளால் அழிக்கப்பட்டார்கள். (யாழ் மேலாதிக்க மையவாத அதிகாரத்துக்கு எதிராக இவர்களின் யாழ் மேலாதிக்க வாதம் எடுபடாமல் போனது).
காந்தீயம் என்ற அமைப்புக் கிராமங்களை மையப்படுத்தி இயங்கிய படியால் சட்ட ரீதியாக தடைசெய்ய முடியாமல்ப் போனதால்த்தான் அன்று அரசு பயங்கரவாதத்தின் மூலம் இயங்கவிடாது முடக்கினார்கள்.
ஜே. வி. பி. கிரம மக்களை முன்வைத்து இயங்கிய படியால் இன்று பலம் உடைய அமைப்பாக வளர்ந்துள்ளது. அதுபோல் டக்லஸ்சின் செயற்பாடு இருந்த படியால்த்தான் இன்று இத் தீர்வுத் திட்டத்தைக் கொண்டுவர முடிந்தது. இதன் மூலம் தமிழ்ப் பேசும் மக்களின் (முழு இலங்கை மக்களின்) நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கின்றார்.
ரு~;யப் புரட்சி நகர மக்களை மையமா வைத்து (தொழிலாளர் வர்க்கம்) நடத்தப்பட்ட படியால் அரசு யந்திர நிர்வாகங்களில் வெள்ளை ர~;யர்கள் இடம் பிடித்தகால் ர~;யா சுக்கு நூறாக உடைந்து போனது (இங்கு பாட்டாளி வர்க்கம் பலவீனம் அடைந்தது).
சீனப் புரட்சி கிராமம் கிராமக (பட்டாளிவாக்;கப் புரட்சி.- விவசாயிகள், ஏழை மக்கள், தொழிலாளர்கள். முற்போக்குத் தேசிய முதலாளித்துவ வாதிகள் ஒன்று இணைந்து) புரட்சியை ஏற்படுத்தி அம் மக்களின் கையில் அரசு யந்திர நிர்வாகத்தை ஒப்படைத்த புரட்சியாகும்.
ஏகாதிபத்தியத்தின் நாகரிகம் சீன இளைஞர்களை மயக்கியதால் ஏற்ப்பட்ட விழைவுதான் சீனாவில் மார்க்சிய வளர்ச்சி பின் தள்ளப்பட்டது.
இதை சமன் செய்யச் சீனாவில் ஒரு கலாச்சாரப் புரட்சியை ஏற்படுத்தினார்கள். ( புரட்சயின் பிறந்த 20 வயதைக் கொண்ட இளைஞர்கள் மத்தியில்த் தான் இம் மயக்கம் உருவாகியது). இதனால்ப் பழைய சீனாவையும், அன்று மக்கள் அனுபவித்த துன்பம் துயரங்களை அறியவைப் பதற்காக இந்தக் கலாச்சாரப் புரட்சி இடம் பெற்றது. நகரத்தில் இருந்து கிராமம் வரை என்ற கோ~;த்தை முன் வைத்தார்கள். இப் புரட்சியை நடைமுறைப்படுத்திய சில தலைமையின் பிழையான அணுகு முறை பல சிக்கல்களை உருவாக்கியது. இருந்தாலும் இன்றைய சீனாவில் உற்பத்தியில்
75 சதவீதமான அன்னிய பொருளாதாரத்தைப் பெற்றுக் கொடுக்கின்றார்கள்.
(அமெரிக்காவிடம் இருந்து). இத் தீர்வுத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது இந்த வரலாறுகளை மனதில் வைத்துச் செயற்படவேண்டும். இதனால் இவ் தீவுத்திடம் வெற்றி பெற்றால்த் தமிழ்ப் பேசும் மக்களுக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக் கொடுக்கும்.
இவ் தீர்வுத் திட்டத்தை பிழை என்று கூறும் நபர்களைப் பற்றிய கடந்தகால, நிகழ்காலச் செயல்பாடுகளை தனிப்பட்ட விமர்சனத்தை (பெயர் குறிப்பிட்டு) முன் வைப்பது அழகு அல்ல. அவர்கள் உண்மையை உணர்ந்து ஜதார்த்தமா மார்க்கத்தை ஏர்படுத்த நாம் சந்தர்ப்பதை கொடுது ஜனநாயகப் பண்பாகும்.