அதிகாரத்தை ஆராதிப்பது வரலாறு அல்ல. வரலாறு என்பது உள்ளதை உள்ளபடி பக்கச்சார்பின்றி கூறுவதே.

இலங்கையின் அரசியல் வரலாறுகளைப் பலர் எழுதியுள்ளாhர்கள். இவர்கள் அனைவரும் தாங்கள் நேசித்த நல்ல நண்பர்களை வைத்துக் கொண்டும், தங்களின் விசுவாசமான தலைவர்களை வைத்துக் கொண்டும், தாம் இருந்து விசுவாசித்த அமைப்புக்களையும், தனி நபர்களையும் வைத்துக் கொண்டும் அவர்களின் பார்வைக்கு ஊடாக ஈழ வரலாறுகளை எழுதியுள்ளார்கள். இவை அனைத்தும் அகங்காரமும் ஆணவமும் கொண்ட ஆளும் அதிகார மேலாதிக்க மைய வாதத்தின் செயற்பாட்டின் (பயங்கரவாதச் செயற்பாடு) நிகழ்வுகளை மையமாக வைத்து எழுதப்பட்ட வரலாறுகள் ஆகும். இவை அதிகாரத்துக்குத் துணை போகும் தமிழ்-ஆங்கில-சிங்கள மேதாவிகளின் கதைகள் தான்  வரலாறு ஆகின்றது. சாதாரண மக்களின் எண்ணங்களையும் அபிலாசைகளையும் அந்த வரலாறுகள் ஒருபோதும் பிரதிபலிப்பது இல்லை.

ஆதாரம் அற்ற நிகழ்வுகள்தான் வரலாறு என்ற எண்ணக் கருவை இந்த மேதைகள் உருவாக்கிவிட்டார்கள். தேச வளமை நடைமுறையும், ஒரு சில பழ மொழிகளும் மக்கள் மத்தியில் நடைமுறையில் உள்ளது. அவைகளின் பின்னணியில் உள்ள உண்மை நிகழ்வுகளும்; வரலாறு ஆக்கப்பட வேண்டும். அப்போது தான் உண்மையான வரலாறு உருவாகும். மேல் எழுந்த வாரியாகவும், கண்ணுக்குத் தெரிந்த நிகழ்வுகளும் மட்டுமே வரலாறு இல்லை. அந் நிகழ்வுகளின் பின்னணியில் உள்ள சம்பவங்களும்தான் வரலாறாக வர வேண்டும்.

உதாரணமாக:- கள்ளர் மறவர், பெரியதோர் அகம் படியார்கள் மெல்ல மெல்ல உயர் சமூகமாக மாறினார்கள். இதற்கு ஆதாரம் இல்லை. ஆனால் இது நியாயமான உண்மை. இப்பழ மொழியின் பின்னணியில் யாழ்ப்பாணத்தில் ஒரு உயர் சமூகம் இருந்தது என்ற உண்மை வெளிப்படுகின்றது.

மற்ற ஒரு உதாரணமாக புஸ்பராஜா எழுதிய ஈழப் போராட்டத்தில் எனது சாட்சி என்ற நூல் அமிர்தலிங்கத்தின் மீதும், பிரபாகரன் மீதும் வைத்து இருந்த விசுவாசத்தின் வெளிப்பாடாக வந்த வரலாறாகும். அத்துடன் தான் சார்ந்தவர்களைக் கௌரவப்படுத்துவதற்கு ஜதார்த்தத்;துக்குப் புறம்பான தகவல்களைக் கூறி ஆவணமாக்கியுள்ளார். சமகாலத்தில் வாழும் பலருக்கு அப் புத்தகத்தில் வரும் பல தகவல்கள் மயக்கத்தைக் கொடுப்பதால் எமது வருங்கால சந்ததியினர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் விசமாக அமைந்து விடுகிறது புஸ்பராசாவின் வரலாற்றுப்பதிவு.

மகாவம்சம் என்ற வரலாற்று நூல் பௌத்த சிங்கள இனவாதிகளைப் பெருமைப்படுத்த எழுதப்பட்ட வரலாற்று நூலாகும். வரலாறுகளைத் தாங்கள் ஆவணம் செய்வதாகக் கூறிக் கொண்டு பிழையான ஆதாரம் அற்ற தகவல்களைப் பதிவு செய்து இதை வரலாறு என்று ஆவணப் படுத்துகின்றார்கள். இவ் வரலாறு மேலும் மேலும் இனச் சிக்கல்களைத்தான் உருவாக்கும். சமூகமும் மனிதனும் மரணமாகும் மட்டும் இவ் வரலாறு இருக்கும். பல வருடங்களாகப் பழக்கப்பட்ட சம்பவங்களில் இருந்து விடுபடுவது என்பது மிகக் கடினமாகும்.

சிங்கள பௌத்த இனவாதிகளினால் தமிழர்களுக்கு ஏற்பட்ட வடுக்களால்

(புலிகள் பௌத்த இனவாதிகளைத் திருப்பித் தாக்கிய படியால்) புலி இல்லாவிட்டால்த் தமிழ் மக்கள் அழிந்து விடுவார்கள் என்று இன்று ஆருடம் கூறுகின்றார்கள். இப்படியான வரலாற்றுப் பதிவுகளை அக்கு வேறாக ஆணி வேறாக விமர்சித்து ஜதார்த்தமான நிகழ்வுகளைப் பதிவு செய்ய வேண்டும். இது இன்றைய ஜதார்த்தமான சமூக அரசியலைக் கொண்ட மனிதர்களின் கடமையாகும்.

இப்படிப் உலகத்தில் பல வரலாறு என்ற பெயரில் பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஜதார்த்தமான வரலாற்றுக்கு உதாரணமாக ஜேர்மனியின் வரலாற்றையும், ஹிட்லரின் பயங்கரவாத வரலாற்றையும் பார்த்தால் பல உண்மைகள் புரியும். இதை முழுமையான வரலாறு என்று கூற முடியாது. இருந்தாலும் ஜேர்மனியில் அன்று வாழ்ந்த மனிதம் படைத்த நபர்கள் எழுதிய வரலாறு தான், ஹிட்லரின் பிறப்பு உரிமையால்க் கிடைக்கப்பட்ட பிரஜா உரிமையைப் பறித்து எடுக்கும் நிலைமையை உருவாக்கியது. இதனால் இன்றைய ஜேர்மன் இளைஞர்கள் அன்று ஹிட்லருக்கு ஆதரவாக இருந்த அல்லது மௌனமாக இருந்த தம் மூதாதையர்களை நீங்கள் ஜேர்மனியர்கள் அல்ல, எம்மவர்களை உலகத்துக்குக் காட்டு மிராண்டிகள் என்று கருதி, உலகத்துக்கு முன்னால் தலை குனிய வைத்து விட்டீர்கள் என்று கூறிக் காறி உமிளுகின்ற நிலை இன்று உருவாகியுள்ளது. இதையும் மனதில் வைத்தக் கொண்டு தான் ஈழ வரலாற்றை எழுதுங்கள்.

மேற்கத்திய நாடுகளில் சிலுவை யுத்தம் 12ம் நூற்றாண்டில் இருந்து 16ம் நூற்றாண்டு வரை இடம் பெற்றது. கத்தோலிக்க மதத்துக்கும் புரட்டஸ்தாந்து மதத்துக்கும் (யேசுவை வழி வந்த மதங்கள், ஓரே கலாச்சாரம் கொண்ட மக்கள்.) இடையே ஆட்சி அதிகார ஆளுமைக்கான போட்டியில் இவ் யுத்தம் உருவாகியது. உலகத்தில் இன்று வரை இடம் பெற்ற சகல யுத்தங்களையும் விட, ஆயதப் போராட்டங்களையும் விட மிக மேசமான அழிவை உருவாக்கியது இந்த யுத்தமாகும். இரு மதங்களைச் சார்ந்த மக்கள் தங்களுக்குள் தாங்கள் அழிக்கப்படுவதை உணர்ந்து, யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, இரு மதத்தையும் ஆளும் அதிகார வர்க்கமாக ஏற்றுக் கொண்டார்கள். ரோமிலும், தென் அமெரிக்காவிலும் கத்தோலிக்க மத ஆதிக்கமும். ஐரோப்பா நாடுகளிலும், கனடா போன்ற நாடுகளிலும் புரட்டஸ்தாந்து மத ஆதிக்கம் நிலவுகின்றது.

இம் மதங்கள் இலங்கையிலும் குடியேறியது. கரையோரப் பகுதிகளில் புரட்டஸ்தாந்து மதமும்;, யாழ்ப்பாணத்திலும், சிங்கள மத்திய பகுதிகளிலும் கத்தோலிக்க மதமும் பரப்பப்பட்டது. புரட்டஸ்த்தாந்து மதம் சீர் திருத்தத் தத்துவத்தைக் கரையோர மக்களுக்குப் போதித்தபடியால் அம் மக்கள் மத்தியில் மாற்ற எண்ணங்கள் உருவாகியது.

ஊதாரணமாக:- கொல்வின் தொடக்கம் விஜியவீரா, தங்கத் துரை வரை.

யாழ் சிங்கள மத்திய பகுதிகளிலும் பழமை வாய்ந்த கத்தோலிக்க யேசு தத்துவத்தைப் போதித்தபடியால் ( இவர்களின் மதமும் அதே பாணியானது)

இம் மக்கள் மனிதனை அடிமையாக்கும் சிந்தனையை உள் வாங்கி உள்ளார்கள். ஈழ விடுதலைப் போராட்டங்கள் அச் சிந்தனைக்கு ஊடாக உருவாகியது. உதாரணத்துக்கு ஜி. ஜி தொடக்கம் பிரபாகரன் வரை ( பிரபாகரன் யாழ் மேலாதிக்க மையவாதச் சிந்தனை வசப்பட்டவர்) டி. எஸ் தொடக்கம் ரணில் வரை.

கத்தோலிக்க மதத்தை சீர் திருத்தும் எண்ணத்தில் புரட்டஸ்தாந்து மதம் உருவானது. அது போல் இந்து மதத்தைச் சீர்திருத்தப் புத்த மதம் உருவாகியது. இலங்கையில் இராமாயனக் காலத்துக்கு முன்னர் இருந்த சைவ சமயம் ஒரு பொதுவுடைமைச் சமயமாகும். இச் சமயத்தில் தனித்துவமான கடவுள் அமைப்பையும், வழிபாட்டு முறைகளையும் அவதானித்தால் இந்த உண்மை புரியும். இந்து மத ஆதிக்கத்தால் சைவ சமயம் இந்து மதத்துக்குள் உள் வாங்கப்பட்டுவிட்டது.

பின்னர் ரோம் ஆதிக்கத்தை அழிப்பதற்கு அமெரிக்காவில் இருந்து 20 க்கு மேற்பட்ட மதங்கள் யேசு தத்துவத்துடன் ஆரம்பமாகியது.

இம் மதங்கள் தென் அமெரிக்காவில் உள் நாடுகளுக்குப் பரப்புவதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால் இம் மதங்கள் ஆசியா நாட்டவர்களை ஆக்கிரமித்து விட்டது. அதாவது கடவுளை நேரடியாகக் காட்டுவதாகக் கூறி மக்களைத் தம்வசப்படுத்தியது. எம் நாட்டு அரசியல் சூழல் மனித இருப்புக்களும், சகல வாழ்வியல் இருப்புக்களும் பறிக்கப்பட்ட நிலையில் வாழும் மக்கள் இப்படியான வாக்கியங்களில் மயங்கி விடுவார்கள்.

உதாரணமாக ர~;யாவின் புரட்சிக்குப் பின் கடவுளைப் பற்றிச் சிந்திக்காமல் வாழ்ந்த மக்களை (மக்கள் கோயில்களை மூடிவிட்டார்கள்) கடவுளின் எண்ணத்தை 50 வருட ர~;யாவின் அரசியல் உருவாக்கியது. மூடப்பட்ட கோயில்கள் மீண்டும் திறக்கப்பட்டது.

வரலாறுகள் பதியப்படும்போதோ அல்லது எழுதப்படும் போதோ மதத்தை தவிர்த்தோ அதன் ஆதிக்கத்தையும், அரசியல் மீது அது செலுத்தும் அதிகாரத்தையும் விடுத்து எழுதி விட முடியாது. சிங்கள அரசியலில் மதத்தின் அதிகாரம் பெரிதாக ஆதிக்கம் செலுத்துகிறது. ஈழத்து விடுதலை அரசியல் வராற்றிலும் மதத்தின் ஆதிக்கம் வெளிப்படையாக தெரியாது போனாலும் செயற்பாடுகளும் நடை முறைகளும் மதச்சாயலை கொண்டிருக்கும். உதாரணத்திற்கு பிரபாகரனை முருகனுக்கு நிகராக வருணிப்பதும் அவரது செயல்கள் யாவும் விமர்சிக்கப்பட முடியாததாகவும் கற்பிக்கப்படுகிறது என்பது கண்கூடு. வரலாறு எழுதுபவர்கள் ஏதேனும் மதத்தை சார்ந்தவராக இருப்பின் உண்மை வரலாறு திரிபு பட்டு போய்விடும். ஏதேனும் ஒரு தேசியத்தை ஆதரிப்பவர்களால் கூட சிறந்த வரலாற்றை பதிவு செய்யமுடியாது என்பதுவும் என் அவிப்பிராயம்.

இது வரை காலமும் எழுதப்பட்ட வரலாறுகள் யாவும் அதிகாரத்தை ஆலாபனை செய்வதாகவும் ஆராதனை செய்வதாகுமே இருந்திருக்கின்றது. அதிகாரத்தை மறுத்தோடி மக்களின் எழுச்சியையும், வீழ்ச்சியையும், அபிலாசைகளையும், இவற்றின் விளைவால் உண்டா உண்மைச் சம்பவங்களுமே எங்களுக்கு வரலாறாக வேண்டும். மையவாத சிந்தனை கொண்ட எந்த வரலாறும் எங்களுக்கும்  எங்கள் சந்ததிக்கும் வேண்டவே வேண்டாம்.

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Comments are closed.