மார்க்சிய வாதிகளும் மேட்டுக் குடிச் சிந்தனையும்

யாழ் மேட்டுக் குடிச் சிந்தனை என்பது முழு மக்களையும் தன் அதிகாரத்துக்குள் கொண்டு வருவதாகும். அமிர்தலிங்ம் வரை ஜனநாயகம் என்ற போர்வையில் மூலம் கொண்டுவரப் பட்டது. இவர்கள் முழுத் தமிழ்ப் பேசும் மக்களையும் (பிரதேச ரீதியாகவும், சாதி ரீதியாகவும், மற்றைய சமூகங்களையும்) ஆளும் அதிகாரச் சக்தியை பெற்றார்கள். இதை ஸ்த்திரப்படுத்த ஆயுதப் போராட்டத்தை உருவாக்கினார்கள். இதன் ஊடாகப் பொதுவுடைமைச் சிந்தனைகளை வளரவிடாது தடுத்து அவர்களை அழித்தார்கள். அப் பொதுவுடைமைத் தத்துவத்தின் உரிமையாளர்கள் என்று உரிமை கோருகின்றார்கள். ஈழ விடுதலைப் போராட்டத்தின் மூலம் தமிழ்த் தேசிய லுன்பங்கள் உருவானார்கள். இது தான் பயங்கரவாதம் தமிழ் மக்கள் மத்தியில் உருவாவதற்குக் காரணமாக அமைந்தது. (லெலின் கூறிய லுன்பங்கள் வேறு). இன்று அதிகாரத்தில் இருப்பவர்கள் யாழ் மேட்டுக் குடி மக்களாக இல்லாவிட்டாலும், அம் மேட்டுக் குடி சிந்தனையைக் கொண்டவர்கள் ஆகும். கருணா (மட்டக்களப்பான்) யாழ்ப்பாணத்துக்கு எதிராக செயல்ப்படுவதால் அவர் தலையை (கொல்ல வேண்டும் என்று யாழ் உயர் சாதியினர் பகிரங்கமாகக் கூறுவது) எடுக்க வேண்டும் என்று கூறுவது
அவ் யாழ் மேட்டுக் குடிச் சிந்தனை தான். தடைசெய்யப்பட்ட அமைப்புக்களில் உள்ள யாழ் இளைஞர்கள் காப்பாற்றப்பட்டதுவும் இதே சிந்தனையின் அடிப்படையில்த் தான்.

இவைகளை வர்க்க ரீதியாகச் சிந்திக்காவிட்டால் நாமும் இச் சக்திக்குள் சிக்க வேண்டிவரும்.

பாசியம் இனவாதத்தின் மறு உருவமாகும். முதலாளித்துவ அடக்கு முறைகளை விட இப் பாசியம் கொடூமானது. இதனால்த்தான் ஸ்டாலின் முதலாளித்துவ நாடுகளுடன் கூட்டுச் சேர்ந்து கிட்லரை அழிக்க முடிந்தது.

ஜேர்மன் தேல்க்கடிக்கப்பட்டதால்த் தான் பயங்கரவாதத்துக்கு; முடிவுகட்டப்பட்டது. அதே சமயம் சீவின் புரட்சி இடம் பெற்றது.

ஜி. ஜி. யாழ் மேட்டுக் குடி மகனாக இருந்தாலும் இனவாதத்தைப் பேசவில்லை. செல்வநாயகத்தால் ஆரம்பித்து வைக்கப்பட்ட யாழ் மேட்டுக் குடி மேலாதிக்கம். அமிர்தர் மூலமாக யாழ் மையவாதமாக வளர்ச்சி பெற்றது. இதற்கு ஒரு படி மேல்ச் சென்று பிரபாகரன் பயங்கரவாத மாக மாற்றினான். பிரபாகரன் யாழ் மேட்டுக்குடி மகன் இல்லை (முந்தி இந்த மேட்டுக்குடியின் சகல மக்களையும் ஆண்டார்கள்) யாழ் மேட்டுக் குடி மக்களை அவன் இனறு ஆளுகின்றான் என்று சிந்திப்பது அபத்தமாகும்.

யாழ் மேட்டுக் குடியினர்கள் யார்?. இன்று யார் இந்த மேட்டுக்குடிச் சிந்தனையை கையாளுவது என்ற கேள்விக்கு விடைகான வேண்டுமாயின் சாதி ரீதியான ஆய்வினையையும், மார்க்சியவாதிகளைப் பற்றிய ஆய்வினையும் செய்ய வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் ஒதுக்கப்பட்ட சமூகம், ஒதுக்கிய சமூகம் எது எது என்று வேறுபடுத்தப்பட வேண்டும். இந்து மதத்தின் ஆதிக்கத்துக்குப் பின் தான்

இந்த மனித வேறுபாடுகள் உருவாகியது. (சைவ சமயத்தில் இவைகள் இல்லை.). ஏன் சைவ உயர் குடிகள் என்று கூறுவது ஏன்எனில் தமிழக்கும் சைவத்துக்கும் உறவு இருக்கின்றபடியால்த் (முருகப் பெருமான் தமிழ்க் கடவுள்) தான் இந்து மதத்தின் மறு பெயராக சைவ சமயத்தைத் தமிழர்களின் மோதிக்கவாதிகள் பயன்படித்திகின்றார்கள். இந்து மதப் பேதனைகளை சைவ சமயப் பேதனைகள் என்று ஆறுமுகநாவலர் அறிமுகப் படித்தினார். இந்து மதத்துக்கும் சைவசமயத்துக்கும் மிகப் பெரிய வேறுபாடுகள் உடையது என்பதை அதனுடைய முறைகளில் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.

யாழ் இந்து மேட்டுக் குடியினரும், மேல்ல மேல்ல மேட்டுக் குடியாக உயர்ந்தவர்களும், குரு குல மீனவ மக்களும் தான் தமிழ் மக்களின் அதிகார வர்க்கமாக விளங்கியவர்கள். மற்றைய சமூக மக்கள் இவர்களின் அடிமைகளாகும்.

இராமாயனப் போருக்குப்பின் தமிழர்களின் ஆதிக்கத்தில் இருந்த சைவ சமயம் அழிக்கப்பட்டு இந்து மதம் தமிழ் மக்களை ஆக்கரிமித்தது. இந்து மேட்டுக் குடியினர்கள் வட இந்தியாவில் பிராமண ஆதிக்கத்தை பரப்புவதக்காக தெற்கை நேக்கி வந்தவர்கள் தான் இவர்கள். திராவட நாட்டின் உள்ள பிராமணியர்களுக்கு முன்னானல் இவர்கள் பயரு அவியாமல் போனதால் தமிழ் நாட்டில் வன்னியர் என்ற சமூகமாக வாழுகின்றார்கள். குறிப்பிட்ட விகிதினர்கள் யாழ்ப்பாணத்தில் வந்து குடியேறினார்கள். இவர்கள் தான் யாழ் இந்து மேட்டுக்குடி சமூகமாகும். இவர்களுக்கு சுதேசிய வருமானம் இல்லாதபடியால் இவர்கள் ஆளும் அதிகாரத்துடன் ஒட்டி வாழ்ந்தார்கள். இதனால் இலங்கையில் உள்ள சகல இன மக்களையும் தங்கள் ஆளும் அதிகாரத்துக்குள் கட்டுப்படித்தி அடிமைகளாக வாழ வைத்தார்கள். யாழ்ப்பாணத்தில் சாதி ரீதியாகவும், பிரதேச ரீதியாகவும், இன ரீதியாகவும், மத ரீதியாகவும், வர்க்க ரீதியாகவும் பகை முரண்பாடுகளை உருவாக்கி மக்களை பிரித்து அதிகாரம் (ஆளுமையும்) செலுத்தினார்கள். சைவ சமயத்தை பின்பற்றிய ஒரு சில சமூகங்கள் இவர்களைப் போல் தாங்களும் அரசு அதிகாரத்துடன் ஓட்டிக் கொள்வதக்காக மேல் மேல் உயர் குடிகலாக மாறினார்கள். இதனால் இவர்கள் தங்களுடைய சுதேசிய வருமானத்தை இழந்து விட்டார்கள். அரசு உத்தியோகம் தான் இவர்களின் தேசிய வருமானமாக மாறியாதல் கல்வி முக்கியத்துவமாக மாறியது. இதனால் தங்களுடைய சகல மனித இருப்புக்களையும் இழந்து விட்டபடியால், அதை நிலை நேறுத்தக்கு மொழி, காலச்சாரம் போன்றவைகளை தூக்கிப் பிடிக்கின்றார்கள். யாழ் மக்களுக்கும் எதிராக எது நடந்தாலும் ஆக்குரொசமா மாறிவிடுவர்கள். அதுகும் பெண் விடையத்தில் (கற்ப்பை முதன்மைப்படித்தி) இவர்களுடைய கோர முகங்களைப் பார்க்களாம். இந்த அடிப்படையில்த்தான் இந்த ஈழப் போராட்டம் தெடங்கப்பட்டது.

இவர்கள் ஏகாதிபத்தியத்தின் பினாமிகளாகவே இருந்தார்கள். இவர்கள் தான் பச்சை இனவாதிகள் ஆகும். 1956 ம் ஆண்டுக்குப் பின் இலங்கை

அரசியலில் பெரும் மாற்றங்கள் ஏர்ப்பட்டது. இதனால் விழிம்பு நிலை மக்களின் வாழ்வு நிலையில் மாற்றங்கள் ஏர்ப்பட்டது. சிங்கள, மலையக, முஸ்லீம் மக்கள் மத்தியில் அதிக அளவு மாற்றங்கள ஏர்ப்பட்டது. யாழ் மேலாதிக்க ஆளுமையால் தமிழ் மக்களின் மத்தியில் ஓர் அளவுக்குத்தான் இம் மாற்றம் நிகழ்ந்தது. ஈழப் போராட்டத்தால் இவ் மாற்றம் முழமையாகத் தடைப்பட்டு விட்டது. தமிழ் மக்கள் மத்தியில் உருவாத மாற்றுத் தலைமைகள் அழிக்கப்பட்டமை, மார்க்சிய பொதுவுடமைவாதிகளும் அழிக்கப்பட்டமை, இவர்களுடன் புத்திஜிவிகளும், மனித நேயமும் ஜனநாயக வாதிகளும் அழிக்கப்பட்டார்கள்.

கரையேரப் பகுதி மக்கள் மீனவர்கள் அல்ல. அவர்களின் ஜீவியத்துக்காக மீன் பிடித் தொழிலை மேற்க் கொண்டவர்கள். இதில் குருகுல மீனவ சமூகம் விதிவிளக்காக இருந்தார்கள். இவர்கள் கப்பல் கட்டி வெளி நாடுகளுக்குச் சென்று வியபாரம் செயதவர்கள்.

யாழ் மேட்டுக் குடியினர்கள் தங்கள் கிராமத்துக்குள் மற்றைய சமூகத்தினர் (ஊயர் சாதியினர்களாக இருந்தாலும் கூட) குடியேற அனுமதிப்பது இல்லை. (நிலம் புலம் விற்க்க அனுமதிப்பது இல்லை). அதேபோல் இவர்கள் வாழும் எல்லைக்குள் மாற்று மனிதர்கள் வருவதை அனுமதிப்பது இல்லை. (இன்றும் அதே நிலைதான்). ஓரே சிந்தனையுடையவர்கள் என்பதக்கு வேறு சாட்சி வேண்டாம்.

யாழ் உயர் மேட்டுக்குடி ஆதிக்கம் மேட்டுக்குடியாக மாறிய உயர் அமிர்தருக்குப் பின்) சாதியினரின் கைக்கு மேலாதிக்கம் மாறியதன் விழைவாக இது மேட்டுக்குடிச் சிந்தனை இல்லை என்று சில மார்க்சிய வாதிகள் எண்னுகின்றார்கள். இதுகும் ஒரு வர்க்க ரீதியான சிந்தனை என்பதை மறுதழிக்கின்றார்கள். இதக்கு ஸ்டலின் 2வது உலகமாகா யுத்தத்தின் போது கிட்லரின் பயங்கரவாத்தை அழிப்பதக்கு முதலாளித்துவ நாடுகளுடன் செய்து கொண்ட ஒப்பத்தத்தை ஒப்பிட்டுக் கதைக்கின்றார்கள். இதில் இருந்து இவர்கள் தங்களை மேட்டுக் குடியினர்கள் என்ற சிந்தனை தோன்றியுள்ளது என்பதே பொருளாகும். இதனால்த்தான் இவர்கள் இந்தத் யாழ் ஈழத் தமிழ் தேசியப் போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். கடந்த காலத்தில் மார்க்சிய இடதுசாரிகளும், பொதுவுடமை வாதிகளும் எப்படி அழிக்கப்பட்டார்கள் என்ற வரலாற்றை இவர்களுக்கு நினைவுட்ட விரும்புகின்றோன்.

இராமானப் போரில் இராமன் இலங்கைக்கு கடல் கடப்பதக்கு எதவியவர்கள் தான் இவ் மீனவ சமூகமாகும். இவர்களின் மத்தியிலும் ஏற்றத் தாழ்வுகளும் உண்டு.

(இவர்களை இராமாயினம் குரங்குகளாக சிந்தரித்துள்ளது அதே போல் இலங்கையில் வாழ்ந்த சைவ மக்களை அரக்கரர்களாக சித்தரித்து உள்ளது)

குருகுல மீனவ சமூகம் இராமரின் வளித் தோன்றலில் உருவான சமூகமாகும். இவர்கள இராமாயின் போரில் கப்பல் ஒட்டும் தலைமைப் பதவியில் இருந்தவர்கள். இதனால்த்தான் இவர்கள் வெளி நாடுகளுக்குச் சென்று (கப்பல் கட்டி) வியாபாரம் செய்தார்கள். மீன் பிடித் தொழிலை செய்யவில்லை. இதனால் மற்றைய மீன் பிடிச் சமூகத்தை குறைந்த சாதியினர்கள் என்று கருதினார்கள். இதனால்த்தான் பிரபாகரன் தங்கத்துரைய டேவிச்னுடைய தலைமைகளை ஏர்க்க மறுத்தது என்பது யதாத்தமா உண்மையாகும்.

பரதனின் வளித் தோன்றலில் உருவான சமூகம் ஆழ் கடலில் மீன் பிடித் தொழிலைப் புரிந்தவர்கள். தங்கத்துரையைச் சார்ந்த சமூகமாகும். இவர்கள் இராமாயின் போரில் உதவிக் கப்பல் ஒட்டிகளாக விளங்கியவர்கள்.

இலச்சுமானின் வளித் தோன்றலில் உருவான சமூகம் நடுக்கடலில் மீன் பிடித் தொழிலை செய்பவர்கள். குட்டிமணியை சார்ந்த சமூகமாகும். இவர்கள்

வீரம் மிக்கவர்கள். இராயினப் போரல் கடல் படை அதிகாரிகளாக தொழில் புரிந்தவர்கள்.

சகாதேவன், நகுளல் போன்றவர்ளின் வளித் தோன்றல் சமூகம் குளத்திலும், கரையோரங்களில் மீன் பிடிப்பவர்கள்.

சிவத்தம்பி, டேவிச்சன் போன்றவர்களின் சார்ந்த சமூகமாகும். இவர்கள் சிந்தனையுடையவர்கள். இவர்கள் இராமாயினப் போரில் சாதாரண கடல்ப்படை வீரர்களாக இருந்தவர்கள். இவ் சமூகத்தின் (முழு இலங்கையின் கடல் கரையோரப் பகுதியில் வாழும் சமூகத்தின்) மத்தியில் இருந்து தான் ஒரு புரட்சிகரமான மாற்றுச் சிந்தனைகள் இலங்கை அரசியலுக்குள் நுழைந்தது.

இதக்கு கொல்வின், சில்வாக்கள், விஜியவீரா, டேவிச்சன் போன்றவர்களை உதாரணம் காட்ட முடியும்.

தீவ மக்களை சாதியின் பெயரால் அழைப்பது இல்லை. பொதுவாக தீவார் என்று தான் அழைக்கப்படுவார்கள். இவர்களில் சிலர் வியாபார ரீதியாக பணம் பலம் அடைந்த பின்பு மேட்டுக்குடிச் சிந்தனையாளர்கலாக மாறி, மேட்டுக்குடி சமூகம் வாழும் பிரதேசங்களில் குடியேறினார்கள்.

பிராமணியர்களுக்கும் தேவதாசிகளுக்கும் (கோயில்களில் இறைவனுக்குத் தொண்டு செய்யும் பெண்கள்) பிறந்த சமூகந்தான் இசை வேளாளர்கள் (நட்டுவர்).

சிவபெருமானின் தலையில் இருந்து பிறந்தவர்கள் பிராமணியர்கள்.
சிவபெருமானின் புசத்தில் இருந்து பிறந்தவர்கள் செங்குந்த சமூகமாகும். (சத்திரியர்) இவர்கள் முருகப் பெருமானின் படைப்பிரிவாகும், பின்னர் யாழ்ப்பாண மன்னர்களின் படைப் பிரிவாக இருந்தவர்கள். போர் இல்லாத

காலங்களில் நெசவு தொழிலைய் மேற் கொணடவர்கள். இந் தொழில் மூலம் உடு துணி தன்நிரைவு பெற்று இருந்தது. இதனால் பிரித்தானியர்கள்
இவர்களின் நெசவுத் தொழிலை அழித்து வறுமையில் நிலைக்கு கொண்டு சென்றார்கள்.

அன்றைய அரசு இவர்களுக்கு கல்வி அறிவையும், அரசு தொழகளையும் கொடுப்பதில் பின் நின்றது. இவர்கள் வாழும் கிரமாத்தில் அம் மக்களில் ஒருதருக்கு பொலிஸ் ( கிராம சேவகர்) பதவி கிடைத்தது. தவிக்க முடியாத காரணத்தல்த்தான் இப் பதவி இச் சமூத்துக்கு இடைத்தது.
இச் செயல்ப்பாட்டுக்கு மேட்டுக் குடியினர்களின் ஆதரவின் மூலம்தான் பித்தானியர்கள் இவர்களை அடிமையாக்கினார்கள். இவர்கள் தங்கள் ஜீவனத்துக்காக மற்றைய சமூகங்களுடன் இணைந்து ஏனைய தமிழ்ப் பிரதேசங்களில் சென்று வாழ்ந்தார்கள்.

ஆறுமுக நாவலரின் பேதனைப்படி சாதிப் படிவங்கள் உருவாகியது. இவர் உருவாக்கிய மதப்புத்தகங்கள் பாடப் புத்தகங்களாக பாடசாலைகளில் பேதிக்கப்படுகின்றது.

இந்து மதத்தால் உருவாக்கப்பட் 4 வர்ணங்களுக்குள் இச் சமூகத்தை அடக்காமல் 5வது வர்ணத்தை உருவாக்கி அதக்குள் அடக்கிவிட்டார்கள். இவ் வர்ணத்துக்குள்த் தான் தாழ்த்தப்பட்ட சமூகங்களையும் அடக்கினார்கள்.

முதலாவது வர்ணம்: ஆளும் வர்க்கத்தைக் கூறிக்கும்
இரண்டாவது வர்;ணம்: பிராமணியர்களைக் கூறிக்கும்
மூன்றாவது வர்ணம்: சந்திரியர்களைக் கூறிக்கும் (போர் வீரர்கள்)
நாலாவது வர்ணம்- வியாபாரிகளைக் கூறிக்கும்

ஐந்தாவது வர்ணம்: உழகை;கும் விளிம்பு நிலை மக்கள்.

1956 ம் ஆண்டுக்குப் பின் இவ் வருணத்தில் (5) உள்ள சமூக மக்களின் வாழ்வு நிலையில் பெரும் மாற்றங்கள் ஏர்ப்பட்டது. குடா நாட்டை தாண்டி வாழும் தமிழ் மக்கள் மத்தியில் சாதி ரீதியான முரண்பாடுகள் மிகப் மிகப் குறைவு. ஊழைப்பால் இவர்களுக்குச் சமத்துவம் கிடைத்தது. இதே போல்த் தான் வர்க்கா ரீதியாக சமத்துவம் கிடைத்தது. இதேபோன்று தான் சிங்கள சமூத்திலும் சமத்துவம் உருவானது.

இனவாதமே, சாதி முரண்பாடுகலே கீழ் இருந்து உருவாவதில்லை, இவை மேல் (அதிகார வர்க்கத்தில் இருந்து) இருந்து உருவாகும். இலங்கையில் இடம் பெரும் சகல நடைவடிக்களுக்கும் மேல்த் தட்டு மக்கள்தான் காரணமாகும். ஆனாலும் யாழ் மேட்டுக் குடிச் சிந்தனை தான் முழக் முக்கப் பொறுப்பாகும். இவைகளை ஒரு வர்க்க அடிப்படையில் வைத்துச் சிந்திக்க வேண்டும். இதை விட்டுவிட்டு ஈழப் போராட்டம் மேட்டுக்குடி சிந்தனைக்கு எதிரான போராட்டம் என்று கூறுவது திருபுவாதச் சிந்தனையாகும். இவர்களும் ஒரு மேட்டுக் குடிச் சிந்தனை வாதிகள் என்று கருதத் தோன்றுகின்றது. இதனால்த் தான் இவர்கள் ஈழப் பயங்கரவாத்தை ஆதரிக்கின்றார்கள். இதக்கு பொதுவுடைமைப் புரட்சி நடத்திய முன்னேடிகள் கூறிய விடையங்களை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்துகின்றார்கள்.

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Comments are closed.