காந்தீயம் உங்களை வரவேற்கிறது.

ஈழப் பயங்கரவாதத்தாலும், அரசப் பயங்கரவாதத்தாலும் மரணித்த சகல உடன்பிறப்புக்களுக்கும், இலங்கை மக்களுக்கும் இந்த இணையதளத்தைக் காணிக்கையாக செலுத்துகின்றேன்.
எமது வாசகர்களுக்கு
ஒரு மாற்றுக் கருத்துக் கொண்ட சமூக அரசியலைத் தமிழ்ப் பேசும் மக்கள் அடைவதற்குத் தடையாக இருப்பது இந்த யாழ் உயர் மேலாதிக்க மேட்டுக் குடிச் சிந்தனையாகும். இச் சிந்தனை சகல இன மக்களின் விடுதலைக்கும் தடையாக இருக்கின்றது. இச் சிந்தனையாவது யாழ் மையவாதம் கொண்ட பயங்கரவாதம் ஆகும்.
நான் எழுதும் கட்டுரைகள் எந்த ஒரு தனி மனிதர்களையோ, எந்த ஒரு இனத்தையோ, எந்த ஒரு மதத்தையோ, எந்த ஒரு மொழியையோ, எந்தச் ஒரு சாதியையோ புண்படுத்தும் நோக்கத்தில் எழுதவில்லை. எமது உயர் இந்து மேலாதிக்க மேட்டுக் குடிச் சிந்தனைக்கு எதிரானது என்பதை உறுதியாகக் கூறி வைக்கின்றேன். மேட்டுக் குடியினர்கள் எல்லோரும் இச் சிந்தனைக் கொண்டவர்கள் அல்ல ஈழப் போரட்டத்தின் நடைமுறையால் இச் சிந்தனையால் கவரப்பட்டடு, மனிதத்தை இழந்துவிட்டார்கள். இதனால் இச் சிந்தனை மூலம் வரும் ஆபத்துக்களைப் பரிய வைப்பதற்காகத் தான் இக் கட்டுரைகள் எழுதப்பட்டது.
எமது மத்தியில் இச் சிந்தனை குடி கொண்டு இருப்பதால்த் தான் தமிழ் மக்களுக்கு இந்த நிலைமை இன்று ஏற்பட்டது. தமிழ் மக்களிடம் இருந்து இச் சிந்தனை 0.00 வீதம் கூட இருக்கக் கூடாது என்பதற்காவும், இச் சிந்தனை களையப்பட வேண்டும் என்பதற்காகவும், இதன் மூலம் நாம் எல்லோரும் மனிதம் கொண்ட மனிதர்களாக மாற்றம் அடைய வேண்டும் என்பதற்காகத் தான் இக் கட்டுரைகளை எழுதியுள்ளேன். இக் கட்டுரைகளில் பிழை சரி இருக்கும், குழப்பங்களையும் ஏற்படுத்தும். இவைகளைச்சுட்டிக் காட்டினால் அதன் மூலம் என்னை நான் திருத்திக் கொள்ள முடியும். இல்லாவிட்டால் நீங்கள் குறிப்பிடும் விடையத்தைத் தர்க்க ரீதியாகவும், சமூக தத்துவாத்த அரசியல் ரீதியாகவும் விளக்கத்தை என்னால்த் தர முடியும். இதன் மூலம் எங்களுக்கு இடையே உறவுகள், நடப்புக்கள், தோழமைகள் புரிந்துறணர்வுகள் ஏற்படும். இது ஒரு ஆரோக்கியமான மாற்றுக் கருத்தைத் தோற்றுவிக்கும். எமது மக்களின் விடுதலை எமது கையில்த் தான் உண்டு. நம் மத்தியில்க் குடி கொண்டு இருக்கும் அகங்காரம்களை அகற்றி ஒரு ஜதார்த்தமான மாற்றுக் கருத்துக் கொண்ட சமூக அரசியலைத் தோற்றுவிப்பது இவ் இணையதளத்தின் முக்கிய நோக்கமாகும்.

Comments are closed.